பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின், ஒரே மகனான நடிகர் அருண் விஜய் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி, வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அதன்படி 1995-ஆம் ஆண்டு 'முறை மாப்பிள்ளை' என்கிற படத்தில் அறிமுகமானார். சுந்தர் சி இயக்கிய இந்த படத்தில் கிருத்திகா மற்றும் ராஜஸ்ரீ ஆகியோர் கதாநாயகியாக நடித்திருந்தனர். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை என்றாலும், அருண் விஜய்க்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
ஒரு சில படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தாலும், பல படங்கள் தோல்வியடைந்தது. மேலும் இவர் கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்த மலை மலை திரைப்படம், இவரை வேறு ஒரு கோணத்தில் ரசிக்கவைத்தது. இந்த படத்தின் மூலம் ரொமான்டிக் ஹீரோ என்பதை உடைத்தெறிந்த அருண் விஜய், கதையிலும், கதாபாத்திரத்திலும் அதிகம் கவனம் செலுத்த துவங்கினார்.
இதை தொடர்ந்து இவர் நடித்த குற்றம் 23, செக்க சிவந்த வானம், தடம், மாஃபியா, யானை, போன்ற படங்கள் இவரது ஹிட் லிஸ்டில் இணைந்து, முன்னணி நடிகராக மாற்றியது.