'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்கிற பழமொழியை பிரதானமாக கொண்டது இந்த போகி பண்டிகை. பொங்கல் துவங்குவதற்கு முந்தைய நாள், மக்கள் கொண்டாடுகிறார்கள்.
அதாவது போகி பண்டிகை அன்று, நம் வீட்டில் உள்ள பழைய பொருட்களான... பாய், துடைப்பம், கிழிந்த துணிகள், போன்றவை எரிக்கப்படுகிறது. இப்படி செய்வதால் நம்மை சுற்றி உள்ள எதிர்மறை விஷயங்கள் அழிக்கப்படும் என நம்புகின்றனர்.
இன்று காலை கொட்டிய பணியை கூட, கண்டு கொள்ளாமல்... நடிகையும் அமைச்சருமான ரோஜா முதல் மக்கள் அனைவரும் தங்களுடைய வீட்டின் வாசலில் போகி கொண்டாடி மகிழ்ந்தனர். தற்போது இது குறித்த புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.