Thalapathy vijay
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் விஜய், தன்னுடைய தந்தை இயக்கத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், ஹீரோவாக மாறியவர். தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு எளிதாக கிடைத்து விட்டாலும், மக்கள் மனத்தில் தன்னை ஒரு ஹீரோவாக நிலைநிறுத்திக்கொள்ள பல வருடங்கள் ஆனது.
விஜயின் கட்சி தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்கவில்லை என்றாலும்... சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான பணிகள் இப்போதே துரிதமாக நடந்து வரும் நிலையில், விஜய் அடுத்து இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படும் படமே... கடைசி படம் என தெரிவித்துள்ளார்.
இது ஒருபக்கம் இருக்க தளபதி அண்மையில், சாய் பாபா கோவிலில் இருந்தபடி எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியானது. இதை பார்த்த ரசிகர்கள் பலர், இது தளபதி விஜய் தன்னுடைய அம்மாவுக்காக கோட்டூர் புறத்தில் கட்டி இருக்கும் சாய்பாபா கோவில் என கூறி வருகிறார்கள்.