Suriya: விபத்தில் உயிரிழந்த நற்பணி மன்ற மாவட்ட தலைவர்! வீடு தேடி சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய சூர்யா!

First Published Feb 12, 2024, 1:33 PM IST

நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகரும், சூர்யா நற்பணி இயக்கத்தின் விழுப்புரம் மாவட்ட தலைவர் மணிகண்டன் விபத்தில் மரணம் அடைந்த நிலையில் சூர்யா நேரடியாக சென்று மரியாதை செய்துள்ளார் இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் என்பதை தாண்டி, ஒரு சமூக அக்கறை கொண்ட மனிதராக வலம் வரும் இவர், அகரம் என்கிற அறக்கட்டளை மூலம் ஏராளமான குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். இவரால், அந்த அறக்கட்டளையில் பயிலும் பல மாணவ - மாணவிகளின் கல்வி கனவு நனவாகி உள்ளது.

சூர்யாவைப் போல் அவரது ரசிகர்கள் பலர் சமூக அக்கறையோடு பல்வேறு மக்கள் நலப் பணிகளை செய்து வருவகின்றனர். சூர்யா ரசிகர் மன்றம் என்பதை தாண்டி... நற்பணி மன்றங்களும் செயல்பட்டு வருகிறது. 

சூப்பர் உமனாக மாறிவரும் கதாநாயகிகள்! காஜல் அகர்வாலை தொடர்ந்து... தனுஷ் பட நாயகி சம்யுக்தா எடுக்கும் ரிஸ்க்!

இந்நிலையில், சூர்யா நற்பணி இயக்கத்தின் விழுப்புரம் மாவட்ட தலைவர், மணிகண்டன் கடந்த பிப். 7ம் தேதி, சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவரது இழப்பு சூர்யாவை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. இந்த செய்தியை அறிந்ததுமே...கங்குவா படப்பிடிப்பில் இருந்தபடி... போன் மூலம் தொடர்பு கொண்டு அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் சூர்யா.

இதை தொடர்ந்து இன்று நடிகர் சூர்யா நேரடியாக... விழுப்புரத்தில் உள்ள மணிகண்டன் வீட்டிற்கு சென்று மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி... அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கல்யாணத்துக்கு முன்பே ஹனிமூனா? சாய் பல்லவி தங்கச்சி வெளியிட்ட போட்டோஸ் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

click me!