அப்பா 8 அடி பாய்ந்தால்... 16 அடி பாயும் பிள்ளை! 13 வயசுல கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கிய சூர்யா மகன் தேவ்!

First Published Apr 22, 2024, 10:59 PM IST

நடிகர் சூர்யாவின் மகன் தேவ் தன்னுடைய 13 வயதிலேயே கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கி பெற்றோரை பெருமைப்படுத்தியுள்ளார். இதுகுறித்த போட்டோஸ் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகனான சூர்யா, ஆரம்பத்தில் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக இயக்குனர் வசந்த் தேடி சென்று 'ஆசை' படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார். ஆனால் கார்மெண்ட்ஸ் பிஸ்னஸில் கவனம் செலுத்தி வந்ததால் அப்போது அந்த படத்தின் வாய்ப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதன் பின்னரே மீண்டும், இயக்குனர் வசனத்தை தேடி சென்று சூர்யா வாய்ப்பு கேட்க, அஜித் அந்த படத்தில் இருந்து விலகியதும் சூர்யாவுக்கு அந்த வாய்ப்பு சென்றது. ஆனால் இப்படம் சூர்யாவுக்கு தோல்வி படமாக அமைந்தாலும், அடுத்தடுத்து காதலே நிம்மதி, சந்திப்போமோ, பெரியண்ணா, பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்து என தொடர்ந்து லவ் சப்ஜெக்ட் படங்களை தேர்வு செய்து நடித்தார்.

2001-ஆம் ஆண்டு மீண்டும் விஜயுடன் சூர்யா இணைந்து நடித்த ஃபிரண்ட்ஸ் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தாலும், சூர்யா தனி ஹீரோவாக ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. இந்த படத்திற்கு பின்னர் இயக்குனர் பாலா இயக்கத்தில்... சூர்யா நடித்த நந்தா மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. சூர்யா திரையுலக வாழ்க்கையிலும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. 

இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் ஆக்ஷன் ஹரோவாக களமிறங்கிய சூர்யா, ஸ்ரீ, மௌனம் பேசியதே, காக்க காக்க என தொடர்ந்து வித்தியாசமான கதை தேர்வில் கவனம் செலுத்திய நிலையில், சில படங்கள் கை விட்டாலும் சில படங்கள் கை கொடுத்தது. 

மேலும் காக்க காக்க படத்தின் மூலம் ஜோதிகா - சூர்யா இடையே மலர்ந்த காதல், 2006-ஆம் ஆண்டு திருமணத்திலும் முடிந்தது. திருமணத்தின் போது, சூர்யா குடும்பத்தினர் ஜோதிகா திரையுலகை விட்டு விலக வேண்டும் என கூற ஜோதிகா அதனை ஏற்று கொண்டு சூர்யாவை கரம் பிடித்தார்.

இவர்களின் காதலுக்கு அடையாளமாக தற்போது 15 வயதில் தியா என்கிற மகளும், 13 வயதில் தேவ் என்கிற மகனும் உள்ளனர். சூர்யா குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் அளவுக்கு வளர்ந்த பின்னர் மீண்டும் திரையுலகில் தன்னுடைய கணவரின் முழு ஒத்துழைப்போடு ரீ-என்ட்ரி கொடுத்தார்.

அதே போல் சமீபத்தில் கணவர் மற்றும் குழந்தைகளோடு மும்பையில் பாந்த்ரா பகுதியில் சொந்த வீடு வாங்கி குடியேறி உள்ளனர். அதே போல் ஜோதிகா தமிழ் படங்களை தொடர்ந்து ஹிந்தி படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். அவ்வப்போது விதவிதமான உடையில் போட்டோ ஷூட் நடத்தி அதனை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அப்பா - அம்மா இருவருமே எப்படி நடிப்பு, உடல் பயிற்சி என இரண்டிலும் கவனம் செலுத்துகிறார்களோ... அதே போல், தியா - தேவ் இருவரும் படிப்பு, ஸ்போர்ட்ஸ், போன்றவற்றில் கவனம் செலுத்துகிறார்கள். 

தேவ் சிறு வயதில் இருந்தே கராத்தே கற்று வரும் நிலையில், அதில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார். இதுகுறித்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!