கோடை காலம் நடந்து கொண்டிருக்கிறது. அனல் காற்றும், வெப்பநிலையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. எனவே, இதிலிருந்து மீள சிறந்த வழி தர்பூசணி தான். இது உடலை குளிர்ச்சியாக வைப்பதால் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதில் 95% நீர், நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சொல்லபோனால், இது ஆரோக்கியத்திற்கு அற்புதமான நன்மைகளை அள்ளிக் கொடுக்கும். ஆனால், தர்பூசணியை அதிகமாக சாப்பிட்டால் தீங்கு விளைவிக்கும் தெரியுமா..? சரி வாங்க இப்போது தர்பூசணியை அதிகம் சாப்பிட்டால் என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தர்பூசணியை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:
இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் : சர்க்கரை நோயாளிகள் தர்பூசணியை அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்பது நல்லது. காரணம் அதில், கிளைசெமிக் குறியீடு 70 அல்லது அதற்கு மேற்பட்டவை மற்றும் அதிக ஜி.ஐ உள்ளது. எனவே, நீரிழிவு நோயாளிகள் தர்பூசணியை அதிக அளவில் சாப்பிட்டால், அவர்களின் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
அதிக நீரேற்றம் : தர்பூசணியில் அதிகளவு நீர்ச்சத்து உள்ளது. இது கோடைக்கு நல்லது என்றாலும் அதிகமாக எடுத்து கொண்டால், அதிகப்படியான நீரேற்றத்தை எதிர்கொள்வீர்கள். மேலும் இது உங்கள் உடலில் உள்ள நீரின் அளவை அதிகரித்து சோடியத்தின் அளவைக் குறைக்கிறது. இதன் காரணமாக வீக்கம், சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D