Jegannath temple
ஜகன்னாதர், தேவி சுபத்ரா மற்றும் பலபத்ராவின் தேர் திருவிழா என்றும் அழைக்கப்படும் ரத யாத்திரை, ஒடிசாவின் பூரி நகரத்தில் நடைபெறும் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான இந்து திருவிழாவாகும். இது இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள மிகப் பழமையான ரத யாத்திரையாகும். பூரி இந்து பாரம்பரியத்தின் புனிதத் தலங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் பல்லாயிரம் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் சுக்ல பக்ஷத்தின் இரண்டாம் நாளில் நடைபெறும்.
Jegannath temple
பொதுவாக காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும் மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும். ஆனால் பூரியில் இதற்கு நேர் எதிராக நடக்கும். சிங்கத் துவாராவின் முதல் படியில் கோவிலின் உட்பறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது.