2002 இல் வெளியான ஈஸ்வர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர் நடிகர் பிரபாஸ். அவரின் முதல் படம் சராசரியான வெற்றியை பதிவு செய்த நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் வர்ஷம், சத்ரபதி, புஜ்ஜிகாடு போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தார். தனது திரை வாழ்க்கையில் வெற்றி, தோல்விகளை மாறி மாறி சுவைத்து வந்தார்.
ஆனால் 2015-ல் பாகுபலி 1, 2017-ல் பாகுபலி 2 என அடுத்தடுத்து மிகப்பெரிய வெற்றிப்படங்களில் நடித்ததன் மூலம் பான் இந்தியா நடிகராக மாறினார். பாகுபலி 1, பாகுபலி 2 இரண்டுமே பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புதிய சாதனை படைத்து இந்தியாவின் அதிக வசூல் செய்த படங்களில் இடம்பிடித்தன.
பாகுபலி படங்களின் வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் படங்கள் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்தது. ஆனால் பிரபாஸ் தனது திரை வாழ்க்கையில் மோசமான கட்டத்தை சந்தித்தார் என்றே சொல்ல வேண்டும்.
கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ச்சியாக தோல்விப் படங்களைக் கொடுத்து வருகிறார்.மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான சாஹோ படம் வசூல் ரீதியில் ஓரளவு தப்பித்தாலும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இதை தொடர்ந்து பிரபாஸின் ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் ஆகிய இரண்டும் பெரிய தோல்விப்படங்களாக அமைந்தன..
எனினும் கடந்த ஆண்டு சலார் படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார் பிரபாஸ். இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்தது. இந்த நிலையில் தனது திருமணம் குறித்து நடிகர் பிரபாஸ் சொன்ன தகவல் வெளியாகி உள்ளது. பாகுபலி படத்திற்குப் பிறகு பிரபாஸ்க்கு 5000 திருமண புரோபசல் வந்ததாக கூறப்படுகிறது.
ராதே ஷ்யாம் படத்திற்கான புரோமோஷன் பணிகளின் போது பிரபாஸ் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். இதுகுறித்து பிரபாஸ் கூறுகையில், “பாகுபலிக்குப் பிறகு எனக்கு 5000 திருமண புரோபசல் வந்தன. நான் மிகவும் குழப்பமடைந்தேன். என் அம்மாவின் விருப்பப்படி கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். கண்டிப்பாக காதல் திருமணம் செய்து கொள்வேன்”. என்று தெரிவித்தார்.
இதனிடையே நடிகர் பிரபாஸ் சக நடிகைகள் பலருடன் டேட்டிங் செய்ததாக பல கிசுகிசுகள் வெளியானது.. பாகுபலி படத்தில் நடித்த போது அவர் அனுஷ்கா ஷெட்டியுடன் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்பட்டது..
பின்னர், ஆதிபுருஷ் படத்தின் வெளியீட்டின் போது, சக நடிகையான் சனோனுடன் டேட்டிங் செய்வதாக வதந்தி பரவியது. எனினும் இந்த வதந்திகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. தான் காதல் திருமணம் செய்து கொள்வதாக ஏற்கனவே கூறியிருப்பதால், அவரை யாரை காதலிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
நாக் அஸ்வின் இயக்கி வரும் கல்கி 2898 கி.பி. படத்தில் பிரபாஸ் தற்போது நடித்து வருகிறார். சூப்பர் ஹீரோ பேண்டஸி படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் புராணக் கூறுகளும் இருக்கும் என்று கூறப்படுகிறது. மகாபாரத காலத்திலிருந்து கதை தொடங்கும் என்றும் எதிர்காலத்தில் பல நூற்றாண்டுகள் வரை தொடரும் என்றும் இயக்குனர் கூறியுள்ளார். இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.