ஜோதிட சாஸ்திரப்படி, படிப்பில் கில்லாடிகளாக விளங்கும் மூன்று ராசிக்காரர்களைப் பற்றி சொல்லப் போகிறோம். மற்ற ராசிகளை விட இந்த மூன்று ராசிக்காரர்களும் கல்வியில் வேகமும் கூர்மையும் கொண்டவர்கள். பெற்றோரின் பெயரை காப்பாற்றும் இந்த ஞான ராசிகள் யார் என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்..
மேஷம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்த ராசிக் குழந்தைகள் படிக்கும் மற்றும் எழுதும் விஷயத்தில் மிகவும் புத்திசாலிகளாகக் கருதப்படுகிறார்கள். மேலும் இவர்கள் குடும்பத்தின் பெயரைப் பிரகாசிக்கச் செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். எந்த ஒரு பிரச்சனையையும், சூழலையும் பயமின்றி எதிர்கொள்ளும் திறமை இவருக்கு உண்டு.
இதையும் படிங்க: Rasi Palan : காதல் திருமணம் 'இந்த' ராசிக்காரர்களுக்கு தான் அதிர்ஷ்டம்..!
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு விரைவான நினைவாற்றல் இருப்பதால், அவர்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள். மேலும் இவர்கள், கடின உழைப்பாளிகள் மற்றும் எந்த ஒரு காரியத்தையும் எளிதாக செய்து முடிப்பார்கள். இவர்கள், எந்த சூழ்நிலையிலும் தோற்கும் மனப்பான்மை இல்லை மற்றும் கடினமான சூழ்நிலைகளில் கூட பின்வாங்க மாட்டார்கள், அதில் வெற்றி பெறுவார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D