Ranbir Kapoor-Rashmika Mandanna
பாலிவுட்டில் கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்த திரைப்படம் அனிமல். இப்படத்தில் ரன்பீர் கபூர் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்த இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி இருந்தார். இவர் அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கியவர் ஆவார். இப்படம் பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்தாலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்படமாகவே அமைந்தது.
Animal Movie
அதன்படி வெறும் ரூ.100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அனிமல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.900 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து, கடந்த ஆண்டு அதிகம் வசூலித்த டாப் 5 படங்களின் பட்டியலில் இணைந்தது. அனிமல் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆக உள்ள நிலையில், இன்னும் இப்படத்தை ஓடிடி ரிலீஸ் செய்யாமல் வைத்திருந்தனர்.
இதையும் படியுங்கள்... கெத்து காட்டிய அட்லீ.. மெர்சல் செய்த அனிமல்! ஃபுல் லிஸ்ட் இதோ!
Ranbir Kapoor
இதற்கு காரணம் வழக்கு தான். டி சீரிஸ் நிறுவனத்திற்கும் சினி ஒன் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கும் இடையேயான நிதி பிரச்சனை காரணமாக இருவரும் நீதிமன்றத்திற்கு சென்றதால் அப்பிரச்சனை முடியும் வரை அனிமல் திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. சமீபத்தில் இந்த பிரச்சனையில் சுமூக தீர்வு எட்டப்பட்டதால் தற்போது அனிமல் திரைப்படம் ஓடிடி ரிலீசுக்கு தயாராகி வருகிறது.