நடிகை ரம்யா பாண்டியன் சினிமாவில் நடித்து பேமஸ் ஆனதைவிட போட்டோஷூட் நடத்தி தான் அதிகளவில் பேமஸ் ஆகி உள்ளார். இவர் ஜோக்கர், ஆண் தேவதை, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் இவரை பேமஸ் ஆக்கியது போட்டோஷூட் தான்.
முதன்முதலில் காட்டன் சேலை அணிந்து மொட்டை மாடியில் ரம்யா பாண்டியன் நடத்திய ரம்மியமான போட்டோஷூட் சோசியல் மீடியாவில் படு வைரல் ஆனதால், அது ஒரு டிரெண்டாகவே உருவாகி, மற்ற நடிகைகளும் மொட்டைமாடியில் போட்டோஷூட் நடத்தி வெளியிட்டனர்.
பின்னர் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்த ரம்யா பாண்டியன், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதலாவது சீசனில் கலந்துகொண்டு தன்னுடைய சமையல் திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தி இறுதிப் போட்டி வரை முன்னேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சினிமாவில் பெரியளவில் வாய்ப்புகள் வராததால், மீண்டும் கவர்ச்சி பாதைக்கு திரும்பிய ரம்யா பாண்டியன், வித விதமான கிளாமர் உடைகளில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
வழக்கமாக இடுப்பழகு தெரிய போட்டோஷூட் நடத்தும் ரம்யா பாண்டியன் தற்போது கிளாமருக்கு லீவு விட்டு, ஸ்டைலிஷான பச்சை நிற உடை அணிந்து இளசுகளை கவர்ந்திழுக்கும் விதமாக கண்கவர் போஸ் கொடுத்து போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார்.