பெற்றோர்கள் வீட்டில் வேலை செய்யும் போது அல்லது குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் போது அவர்கள் செய்யும் முதல் காரியம் மொபைல் போன் மற்றும் டிவியில் கார்ட்டூன்களை போட்டு காட்டுவது தான். ஆனால், இது குழந்தைகளை எப்படி பாதிக்கிறது தெரியுமா..?
வன்முறையை கற்றுக் கொள்ளலாம்: வன்முறையை சித்தரிக்கும் கார்ட்டூன்களை பார்ப்பது குழந்தைகளை நிஜ வாழ்க்கையிலும் வன்முறையில் ஈடுபட ஊக்குவிக்கும். மேலும் வன்முறையை அனுபவித்தாலும் அவர்கள் அதிலிருந்து விடுபடலாம் என்று தவறான தகவல்கள் அதில் வருவதால்,
குழந்தைகள் அதை கற்றுக்கொண்டு, அதன்படி, வன்முறையில் ஈடுபட வாய்ப்பு அதிகம்.
மோசமான நடத்தை: தங்கள் ஆசிரியர்கள் மற்றும் பெரியவர்களிடம் முரட்டுத்தனமான அல்லது கீழ்படியாத நடத்தையை காட்டும் பல கார்ட்டூன்ங்கள் உள்ளன. மேலும், குழந்தைகள் இந்த நடத்தையைப் பின்பற்றி மோசமான நடத்தையில் வளர வாய்ப்பு அதிகம் உள்ளது.
கெட்ட மொழிகளை கற்றுக் கொள்ளலாம்: கார்ட்டூன்ங்கள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு பொருந்தாத மொழியை கொண்டிருக்கின்றனர். இதை பார்க்கும் குழந்தைகள் கார்ட்டூன்ங்களில் இருந்து மோசமான மொழியை கற்றுக்கொண்டு அதை தங்கள் நிஜ வாழ்க்கையில் பயன்படுத்த வாய்ப்பு அதிகம்.
முரட்டுத்தனமான நடத்தை: சமூக விரோத நடத்தையை ஊக்குவிக்கும் மற்றும் குழந்தைகளுக்கு தவறான செய்திகளை கொடுக்கும் பல கார்ட்டூன்கள் உள்ளன. அவை, உங்கள் குழந்தையின் நடத்தையை பாதிப்பது மட்டுமின்றி, அதன்படி, குழந்தைகள் வன்முறையில் வளருவார்கள்.
அடிமையாகலாம்: குழந்தைகள் கார்ட்டூன்களை பார்ப்பதால் அதில் அடிமையாக வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்களின் அன்றாட நடவடிக்கைகள், பொறுப்புகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு பாதிக்கப்படும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D