Palani Murugan Temple
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருகின்றனர். இந்நிலையில் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் பக்தர்கள் கூட்டம் காரணமாக 20 நாட்களில் நிரம்பியது.
Palani Murugan Temple Undiyal
இதையடுத்து திங்கள்கிழமை மற்றும் செவ்வாய் கிழமைகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இரு நாட்கள் எண்ணிக்கை முடிவில் பக்தர்களின் காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் இரண்டு கோடியே 55 இலட்சத்து 37 ஆயிரத்து 740 கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 965 கிராமும், வெள்ளி 29,158 கிராமும் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 574 ம் கிடைத்தன.
Murugan Temple
இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். ஐநூறுக்கும் மேற்பட்டோர் உண்டியல் எண்ணிக்கையில் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணிக்கையில் பழனிக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.