வேலுடமிருந்து வந்த கால்! நடுங்கி போன சுடர்.. மனோகரிக்கு காத்திருந்த அதிர்ச்சி - நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

First Published Apr 4, 2024, 8:12 PM IST

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 
 

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் விதவிதமாக சமைத்து வைத்து எழிலை சாப்பிட வைக்க தொடங்கிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, சுடர் செய்ததை சாப்பிட்டுவிட்டு எழில் சத்தம் போடுவான் என மனோகரி உட்பட எல்லோரும் எதிர்பார்க்க அவன் அமைதியாக சாப்பிடுவதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். 

Top 10 TRP: தடாலடியாக டாப் 10 TRP-யில் இடம்பிடித்த விஜய் டிவி புது தொடர்! ரேட்டிங்கில் சரிவை சந்தித்த சன் டிவி

அடுத்ததாக ஹாஸ்பிடல் வந்த மனோகரி சிசிடிவி ஃபுட்டேஜ் பார்த்து அதில் போலீஸூடன் வேலு சுடரை துரத்தியதை பார்த்து போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணி அந்த போலீஸ் பற்றி விசாரிக்க முயற்சி செய்கிறார். ஆனால் அவர் வெளியூர் சென்றிருப்பதாக ஸ்டேஷனில் சொல்லிவிட மனோகரி அப்செட் ஆகி விடுகிறாள். 

பிறகு வேலு சுடருக்கு போன் போட்டு அந்த டாக்டர் எழில் காப்பாத்திட்டானு சந்தோஷமா இருக்கியா? நான் இங்க இருந்து போகும்போது உன் கழுத்துல தாலி கட்டி என் பொண்டாட்டியாக கூட்டிட்டு போவேன் என மிரட்ட சுடர் அதிர்ச்சி அடைகிறாள். 

திருமணமான இயக்குனரை உருகி.. உருகி காதலித்த பானுபிரியா! இரண்டாம் திருமணம் செய்யாதது ஏன்? உண்மையை உடைத்த பிரபலம்

வேலுவுக்கு பயந்து ரூமை விட்டே வெளியே வராமல் இருக்க ,அஞ்சலி சுடரை மிஸ் பண்ண தொடங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.  ‌

click me!