Ninaithen Vanthaai: வேலுவுடன் கூட்டணி வைத்த மனோகரி! சுடருக்கு காத்திருந்த அதிர்ச்சி நினைத்தேன் வந்தாய் அப்டேட்

First Published Apr 22, 2024, 9:11 PM IST

தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 
 

இது சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சுடர் எழில் தோளில் சாய்ந்து கொண்டுவர அதை பார்த்து மனோகரி கடுப்பாகிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, மனோகரி பாஸ்போர்ட் ஆபிசுக்கு வந்து தமிழ் குறித்து விசாரிக்க அவள் தான் சுடர் என்பதும் அவள் அப்ராட் செல்ல முயற்சி செய்து வருவதும் தெரிய வருகிறது. அதன் பிறகு வேலுவை சந்தித்து நீ உண்மையான தமிழைப் பிடிச்சு என்ன பண்ண போற.? அவளை எழில் கிட்ட ஒப்படைச்சாலும் சின்ன தப்பு தான் என்பதனால் மன்னிச்சிடுவான். நான் சொல்ற மாதிரி பண்ணா சுடர் உனக்குத்தான் என்று ஒரு ஐடியாவை கொடுக்கிறாள். 

Yashika: பிளாஸ்டிக் சர்ஜரி சர்ச்சையில் சிக்கிய யாஷிகா? ரசிகர்கள் விமர்சனத்துக்கு நெத்தியடி பதில்!

அதன் பிறகு தமிழ் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்க மனோகரி தமிழ் வந்ததும் எல்லாமே மாறிப்போச்சு என்று சொல்ல எழிலும் இந்த மாற்றத்தால் சந்தோஷப்படுகிறான். திடீர் என மனோகரி சுடர் என கூப்பிட தமிழ் டக்கென்று திரும்பி பார்க்க என்னாச்சு என்று கேட்க கூப்பிட்ட மாதிரி இருந்தது என சொல்கிறாள். 

மனோகரி இல்ல போன்ல பேசிட்டு இருந்தேன் இன்று சமாளிக்க சுடர் குழப்பமாகவே இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Durai: தேசிய விருது இயக்குனர் துரை யார் தெரியுமா? இந்த சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இவரா.. அரிய தகவல்கள்!

click me!