கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் நயன்தாரா. ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நயன்தாரா, பின்னர் ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார். இவர் நடித்த இரண்டு படங்களும் ஹிட் ஆனதால் ராசியான ஹீரோயின் என பெயரெடுத்த நயனுக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன.
பின்னர் விஜய்க்கு ஜோடியாக வில்லு, அஜித்துடன் பில்லா என டாப் ஹீரோக்களின் படங்களில் கவர்ச்சியிலும் புகுந்து விளையாடிய நயன்தாரா, சிம்பு, பிரபுதேவா போன்ற நடிகர்களுடன் காதல் சர்ச்சையிலும் சிக்கினார். இருப்பினும் அவரின் இந்த இரண்டு காதலும் தோல்வியில் தான் முடிந்தது.
திருமணத்துக்கு பின்னர் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமான நயன்தாரா, அங்கு முதல் படத்திலேயே ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அட்லீ இயக்கிய இப்படம் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.
முதல் படத்திலேயே ரூ.1000 கோடி வசூலை அள்ளி மாஸ் காட்டிய நயன்தாரா, அடுத்தடுத்து பாலிவுட்டில் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் நயன்தாரா, கதை பிடித்தால் மட்டுமே நடிப்பேன் என்கிற முடிவில் தீர்க்கமாக உள்ளார். கோலிவுட்டிலும் நயன் கைவசம் மூன்று திரைப்படங்கள் உள்ளன.