தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை, பிரம்மாண்டமாக இயக்கி ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம்பிடித்தவர் ஷங்கர். இவர் தற்போது உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து 'இந்தியன் 2' படத்தை இயக்கி முடித்த கையேடு... 'இந்தியன் 3' படத்தை இயக்கி வருகிறார்.
ஒரு படத்திற்கு 50 கோடி வரை சம்பளம் பெரும் பிரபலமாக இருக்கும், இயக்குனர் ஷங்கர் கடந்த சில வருடங்களாகவே தன்னுடைய மூத்த மகள் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை என வருத்தத்தில் இருந்தார்.
இதை தொடர்ந்து, ரோஹித் 16 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்ப்ரயோகம் செய்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சிறுமி கொடுத்த புகாரின் பேரில், ரோஹித் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரம் ஐஸ்வர்யா - ரோஹித் திருமண வாழ்க்கையில் புயலை கிளப்பிய கிளையில் திருமணமான சில மாதங்களிலேயே ரோஹித்திடம் இருந்து பிரிந்து தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.
தன்னுடைய மகள் வாழ்க்கை விஷயத்தில், கூடுதல் கவனம் செலுத்தி சிறந்த மாப்பிள்ளையை அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த ஷங்கர், பல வருடங்களாக தன்னிடம் துணை இயக்குனராக பணியாற்றிய தருண் கார்த்திகேயனை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.