முன்பெல்லாம், 28 வயதை கடந்து விட்டாலே... தமிழ் சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு கிடைப்பது அரிதாகிவிடும். எனவே பல நடிகைகள்... வெளிநாட்டு மாப்பிள்ளை, மற்றும் பிஸ்னஸ் மேனாக பார்த்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுவார்கள். அந்த வகையில் ராதா, அம்பிகா, ஸ்ரீப்ரியா, நதியா போன்ற பலர் திருமணத்திற்கு பின்னர் திரையுலகை விட்டு வெளியேறியவர்கள் தான்.
தற்போது 40 வயதை நெருங்க உள்ள நடிகை நயன்தாரா, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வருவது மட்டும் இன்றி, கடந்த ஆண்டு 'ஜவான்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிலும் கதாநாயாகியாக அவதாரம் எடுத்தார்.
திரைப்படங்களில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும், கணவருடன் சேர்ந்து இவர் செய்து வரும் பல்வேறு தொழில் நிறுவனங்களையும், அதே நேரம் தன்னுடைய கணவர், குழந்தைகளையும் கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்கிறார். தற்போது நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட பின்னர், முதல் முறையாக கணவருடன் சேர்ந்து கவர்ச்சி உடையில் நயன்தாரா மேகசீனுக்குமாக எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.