நயன்தாரா மட்டும் வேண்டவே வேண்டாம்..! அவமானப்படுத்திய ஹீரோ... காத்திருந்து பழி தீர்த்த லேடி சூப்பர் ஸ்டார்!

First Published Feb 9, 2024, 12:43 PM IST

நடிகை நயன்தாரா பிரபல ஸ்டார் ஹீரோ ஒருவரை, மேடையில் பல பேர் மத்தியில் காத்திருந்து பழிதீர்த்த பழைய சம்பவம் ஒன்று மீண்டும் பேசும்பொருளாக மாறியுள்ளது.
 

Nayanthara

கோலிவுட் திரையுலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாராவுக்கு, தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், போன்ற தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எனவே இவரை வைத்து படம் இயக்கமும், தயாரிக்கவும், பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போடுவது உண்டு.
 

Nayanthara

விஜய், அஜித், முதல் மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, பாலையா வரை பல டாப் ஹீரோக்கள்  நடிகை நயன்தாராவை தங்களுடைய படங்களில் கமிட் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர்களிடம் கண்டிஷன் போட்ட சம்பவங்களும் நடந்தது உண்டு.

பாக்கியலட்சுமி சீரியல் இனியாவா இப்படி..? பர்த்டே கேண்டிலில் சிகரெட் பிடிக்கும் நேஹாவின்... அதகள போட்டோ ஷூட்!

அப்படிப்பட்ட நயன்தாராவை ஸ்டைலிஷ் ஹீரோ ஒருவர் வேண்டவே வேண்டாம் என கூறியது மட்டுமின்றி, நயன்தாரா தன்னுடன் நடித்தால் அந்த படத்தில் இருந்து நான் வெளியேறி விடுவேன் என கூறியதாக சில தகவல்கள் வெளியானது. ஆரம்பத்தில் நயன்தாராவை அந்த ஹீரோவுடன் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்த போது, சூழ்நிலை காரணமாக நயன்தாரா ஜோடி போட முடியாமல் போனது தான் இந்த ஈகோ பிரச்சனைக்கு காரணம் என கூறப்படுகிறது.
 

அந்த ஹீரோ வேறு யாரும் இல்லையாம்... தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் தேசிய விருது நாயகன் அல்லு அர்ஜுன் தானாம்.  இப்படியே பல வருடங்கள் நயன்தாரா - அல்லு அர்ஜுனுக்கு இடையே பனிப்போர் நிலவி வந்த நிலையில், நடிகை நயன்தாரா 2016 ஆம் ஆண்டு கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில், நானும் ரவுடிதான் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான அவார்டை அல்லு அருஜுன் கையாலால் பெற இருந்தார் நயன்.

Yami Gautam: திருமணம் ஆகி 3 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான ஜெய் பட ஹீரோயின்! குவியும் வாழ்த்துக்கள்!

சுமார் 7 வருடம் அல்லு அர்ஜுன் மீது உள்ள கோபத்தை வெளிக்காட்டாமல் இருந்த நயன்தாரா, அவார்ட் கொடுப்பதற்காக மேடையில் இருந்த அல்லு அர்ஜுனை பழிவாங்கும் விதமாக, இந்த படத்திற்கு வெற்றியின் முக்கிய காரணம் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான். அதனால் அவருடைய கையால் நான் இதை வாங்க விரும்புகிறேன் என அல்லு அர்ஜுனை புறக்கணித்தார். இந்த பழைய சம்பவம் குறித்த தகவல் தற்போது மீண்டும் சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

click me!