ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்த தொடரின் 17-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிகளுக்கு உலகளவில் ரசிகர்கள் இருப்பதால், அதன் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றி பல்வேறு நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நடக்கும். அந்த வகையில் கடந்த 2023-ம் ஆண்டு ஐபிஎல் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஏற்கனவே சிலர் கைதாகி உள்ள நிலையில், தற்போது நடிகை தமன்னாவும் இந்த வழக்கில் விசாரணை வளையத்துக்குள் சிக்கி இருக்கிறார். ஏனெனில் ஃபேர்பிளே செயலியை விளம்பரப்படுத்திய காரணத்தால் அவரிடமும் விசாரணை நடத்த முடிவெடுத்த மும்பை சைபர் கிரைம் போலீசார் அவரை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளது. தமன்னா ஏப்ரல் 29-ந் தேதி ஆஜராக வேண்டும் என அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டு உள்ளது.