துபாயில் ரூ.650 கோடியில் ஆடம்பர வீடு.. முகேஷ் அம்பானி தனது பிள்ளைகளுக்கு வழங்கிய ஆடம்பர பரிசுகள்..

First Published May 2, 2024, 3:24 PM IST

முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தங்கள் பிள்ளைகளுக்கு வழங்கிய ஆடம்பர பரிசு பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

பிரபல தொழிலதிபரும் பெரும்பணக்காரருமான முகேஷ் அம்பானியின் குடும்பம் ஆடம்பர வாழ்க்கை மற்றும் விலை மதிப்புமிக்க பரிசுகளை வழங்குவதற்காகவும் அடிக்கடி தலைப்பு செய்திகளில் வலம் வருகிறது. அந்த வகையில் முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தங்கள் பிள்ளைகளுக்கு வழங்கிய ஆடம்பர பரிசு பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்துக்காக துபாயின் பாம் ஜுமேராவில் ஒரு பிரம்மாண்ட வில்லாவை வாங்கினார். 3,000 சதுர அடி பரப்பளவில் 10 படுக்கையறைகள் மற்றும் 70 மீட்டர் தனியார் கடற்கரையை உள்ளடக்கிய இந்த ஆடம்பரமான மாளிகையின் மதிப்பு ரூ. 640 கோடி என்று கூறப்படுகிறது. 

ஷ்லோகா மேத்தா மற்றும் ஆகாஷ் அம்பானியின் திருமணத்தின் போது, நீட்டா அம்பானி தனது மருமகளுக்கு ஆடம்பரமான  Mouawad L’ நெக்லஸை வழங்கினார். 451 கோடி மதிப்புள்ள இந்த நெக்லஸ் 18 காரட் தங்கக் கிளைகளுடன் 407.48 காரட் வைரத்தைக் கொண்டுள்ளது.

அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண விழாக்களுக்காக அம்பானிகள் ஏற்கனவே ரூ.1259 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளனர். இந்த திருமண விழா ஜூலை மாதம் நடைபெறுகிறது. 2023 இல் இந்த ஜோடி நிச்சயதார்த்தம் செய்தபோது, முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி அவர்களுக்கு சுமார் ரூ 4.5 கோடி மதிப்பிலான பென்ட்லி கான்டினென்டல் ஜிடிசி ஸ்பீடு காரை பரிசாக வழங்கினர். 

शादी की रस्म निभाते ईशा अंबानी और आनंद पीरामल।

2018 இல் பிராமல் குழுமத்தின் ஆனந்த் பிரமாலுக்கும் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் உலகின் மிக விலையுயர்ந்த திருமணங்களில் ஒன்றாகக் கூறப்பட்டது. இந்த திருமணத்திற்கு சுமார் 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 830 கோடி) செலவிட்டதாகக் கூறப்படுகிறது. இது தவிர, பிரபலங்கள் மற்றும் பிரியங்கா சோப்ரா போன்ற முன்னணி பிரமுகர்கள் மற்றும் ஹிலாரி கிளிண்டன், ஷாருக்கான் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

click me!