சாவதுதான் எனக்கு ஒரே வழி.. கண்ணீர் விட்டு கதறிய பிக் பாஸ் பிரபலம் மீரா மிதுன்...கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

First Published Jun 5, 2022, 11:37 AM IST

Meera Mithun: தான் இறந்தால் மட்டுமே, தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் தான் செய்த சாதனைகள் தெரிய வரும் என்று, பிக் பாஸ் பிரபலம் மீரா மிதுன்  கண்ணீர் மல்க பேசியுள்ளார். ஆனால், வழக்கம் போல் அவரை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

MEERA MITHUN

பிரபல மாடலும் நடிகையுமான மீரா மிதுன் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார்.இதனை தொடர்ந்து, தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி மற்றும் என்னங்க சார் உங்க சட்டம் ஆகிய படங்களில் சிறு கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். 

MEERA MITHUN

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் மீரா மிதுன். இதில் சக போட்டியாளர்களுடன் எப்போதும் சண்டை சச்சரவு என இருந்து வந்த மீரா மிதுன், ஒரு கட்டத்தில் இயக்குநர் சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார். இதனையடுத்து, குறும்படம் போடப்பட்டு அவர் சொல்வது பொய் என்று நிருபிக்கப்பட்டது.
 

MEERA MITHUN

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த மீரா மிதுன் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி வந்தார். சூப்பர் மாடல் என தன்னைத் தானே கூறிக் கொண்ட மீரா மிதுன், பிரபல நடிகர்கள் மற்றும் அவர்களுடைய மனைவி உள்ளிட்ட அனைவரையும் இழிவாக பேசி பட்டியலின மக்கள் குறித்து தரக்குறைவாக பேசி அந்த வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 

MEERA MITHUN

இந்த வீடியோ பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வழக்கு பதிந்து, அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இந்த நிலையில், மீரா மிதுன்... கடந்த 6 மாதங்களாக நீதிமன்றத்திற்கு அலைந்து திரிவதால் வருமானம் இல்லாமல், காசு இல்லாமல், சாப்பாட்டுக்கே வழியிலல்லாமல் இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். 

meera mithun

மேலும், தன் வளர்ச்சியை யாருக்கும் பிடிக்கவில்லை, தெருவில் போறவர்கள் தன்னை தவறாக பேசுவதால், வீட்டில் தன்னை சேர்த்து கொள்ள மறுக்கிறார்கள், தான் இறந்தால் மட்டுமே, தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் தான் செய்த சாதனைகள் தெரிய வரும் என்று கண்ணீர் விட்டு கதறியுள்ளார். மீரா மிதுன் மனமுடைந்து கதறி அழும் இந்த வீடியோவை பார்த்து ஒரு சிலர் வருத்தப்பட்டாலும், நெட்டிசன்கள் வழக்கம் போல் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க....Vikram: வசூலில் 100 கோடி கடந்த ' விக்ரம்' படம்...2 நாள் முடிவில் பிளாக் பஸ்டர் ஹிட்? படு குஷியில் ரசிகர்கள்...

click me!