மஹாவுக்கு தெரியவந்த உண்மை! வீட்டை விட்டு வெளியேறிய தருணம்... காதலை உணர்வாரா சூர்யா! ஆஹா கல்யாணம் அப்டேட்!

First Published Mar 18, 2024, 4:58 PM IST

சூர்யா தன் மீது பாசம் வைத்திருப்பது போல் நடிக்கும் விஷயம் மஹாவுக்கு தெரியவர அவர் வீட்டை விட்டு வெளியேறும் நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 
 

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று 'ஆஹா கல்யாணம்'. அக்காவை காதலிக்கும் பணக்கார ஹீரோ எதிர்பாராத விதமாக தங்கை மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து கொள்கிறார். பிடிக்காத பெண் தன்னுடைய வீட்டிற்கு மருமகளாக வந்ததை ஏற்றுக்கொள்ளாத மாமியாரின் அன்பை பெறவும், கணவரின் காதலுக்காகவும் போராடி வருகிறார் மஹா.

ஹீரோவின் தாத்தா, உடல்நலம் சரி இல்லாமல் இருப்பதால்... மருத்துவர் கூறிய அறிவுரையின் படி அவர் மனம் கஷ்டப்படாதவாறு பார்த்து கொள்ள, மஹா மீது பாசம் இருப்பது போல் நடித்து வருகிறார் சூர்யா. இதை பார்த்து அதிர்ச்சியடைந்து, சூர்யாவின் அம்மா பலமுறை கட்டாயப்படுத்தி கேட்டும் உண்மையை சொல்ல மறுக்கிறார்.

உண்மையை யூகித்த ஜனனி! கரிகாலன் வார்த்தையை கேட்டு கடுப்பான சக்தி.. எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய அப்டேட்!

ஆனால் கணவன் காட்டும் அன்பு உண்மை என நினைத்து, மகிச்சியோடு இருக்கும் மஹா... சிவராத்திரி அன்று, மனதில் உள்ளதை சூர்யா எழுதிய கடிதத்தை தனியாக எடுத்து வந்து படிக்கிறார். அதில் சூர்யா மஹா மீது பாசமாக இருப்பது போல் நடிப்பதாக எழுதி இருப்பதை கண்டு சுக்குநூறாக உடைகிறார்.

பின் வீட்டை விட்டு வெளியேறும் முடிவை எடுக்கும் மஹா... பித்து பிடித்தது போல் நடந்தே செல்கிறார். எங்கு செல்கிறார்? அவருக்கு என்ன ஆக போகிறது என.. எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், இனியாவது சூர்யா மஹாவின் காதலை புரிந்து கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

திருமணமான ஒரே வருடத்தில் இறந்த கணவர்..! ஏழே மாதத்தில் மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுத்த நடிகை ஸ்ருதி!

click me!