ஹாப்பி நியூஸ்.. வரும் 27ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

First Published Dec 13, 2023, 7:10 AM IST

சிதம்பரம்  நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வரும் 27ம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள  பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்க்கான மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வரும் 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

 இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் வரும் 27ஆம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது. அந்நாளில் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதுதொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;-  சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

டிசம்பர் 27ம் தேதியன்று அவசர அலுவல்களை கவனிக்கும், பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறைந்த எண்ணிக்கையிலான பணியாளா்களைக் கொண்டு வழக்கம்போல இயங்கும். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக 2024ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

click me!