Modi : சொந்த வீடு, கார் இல்லை.. பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த பிரதமர் மோடி - கூறியுள்ள தகவல்கள் என்னென்ன?

By Ansgar RFirst Published May 14, 2024, 7:13 PM IST
Highlights

PM Modi Election Affidavit : லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது பிரமாண பத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். பிரதமர் மோடியின் பிரமாணப் பத்திரத்தின்படி, அவர் ரூ. 3.02 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களையும், ரூ.52,920 ரொக்கத்தையும் வைத்திருக்கிறார், அவருக்கு சொந்தமாக நிலம், வீடு அல்லது கார் ஏதும் இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Latest Videos

பிரதமர் மோடியின் வரிக்கு உட்பட்ட வருமானம் 2018-19 நிதியாண்டில் ரூ.11 லட்சத்தில் இருந்து 2022-23ல் ரூ.23.5 லட்சமாக இரு மடங்காக உயர்ந்துள்ளது என்று பிரமாணப் பத்திரம் மேலும் காட்டுகிறது. பாரத ஸ்டேட் வங்கியில் பிரதமர் மோடிக்கு இரண்டு கணக்குகள் உள்ளன. எஸ்பிஐயின் காந்திநகர் கிளையில் ரூ.73,304 டெபாசிட் செய்யப்பட்டுள்ள நிலையில், எஸ்பிஐயின் வாரணாசி கிளையில் ரூ.7,000 மட்டுமே உள்ளது.

நிபந்தனை ஜாமீன்: சிறையில் இருந்து ஹெச்.டி.ரேவண்ணா விடுவிப்பு!

பிரதமருக்கு எஸ்பிஐயில் ரூ.2,85,60,338 நிலையான வைப்புத்தொகை உள்ளது. பிரதமரிடம் ரூ.2,67,750 மதிப்புள்ள நான்கு தங்க மோதிரங்களும் உள்ளன. 2014 ஆம் ஆண்டு முதல் NDA வின் பிரதமர் வேட்பாளராக வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, ஏழாவது மற்றும் இறுதிக் கட்டத் தேர்தலின் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடைபெறும் இடத்தில் இருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

இன்று செவ்வாய்க்கிழமை, பிரதமர் மோடி தனது வேட்புமனு தாக்கல் செய்ய வாரணாசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றபோது, ​​அவருடன் பா.ஜ.க. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட தலைவர்கள் அவருடன் காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேபரேலி உள்ளூர் சலூன் கடையில் தாடியை ட்ரிம் செய்த ராகுல் காந்தி!

click me!