10 ஆயிரம் கோடி சொத்துக்களா? 3 ஹீரோஸ், ஒரு நடிகை, ஒரு பாடகி அடங்கிய கோலிவுட்டின் பணக்கார பேமிலி யார் தெரியுமா?

First Published Apr 25, 2024, 10:04 AM IST

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்களை மிஞ்சும் அளவுக்கு அதிக சொத்துக்களுடன் கூடிய கோலிவுட்டின் பணக்கார பேமிலி பற்றி பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் ஒரு படத்துக்கு கிட்டத்தட்ட ரூ.150 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார்கள். இவர்களின் சொத்து மதிப்பும் படத்துக்கு படம் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் கோலிவுட்டின் பணக்கார குடும்பம் மேற்கண்ட நடிகர்களுடையது இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா. இவர்களையெல்லாம் மிஞ்சும் வகையில் சொத்துக்களை சேர்த்து ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறது ஒரு பேமிலி.

அது வேறு யாருமில்லை நடிகர் சிவக்குமாரின் குடும்பம் தான். சிவக்குமாரின் குடும்பத்தில் அவரைப்போலவே அவரது மகன்களும் டாப் ஹீரோவாக வலம் வருகிறார்கள். இதுதவிர சிவக்குமாரின் மருமகள் ஜோதிகாவும் பான் இந்தியா அளவில் கலக்கி வருகிறார். மேலும் சிவக்குமாரின் மகள் பிருந்தாவும் சினிமாவில் பாடகியாக பணியாற்றி வருகிறார். இப்படி ஒரே குடும்பத்தில் இருந்து 5 பேர் சினிமாவில் பணியாற்றி கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்... நிறைமாத கர்ப்பிணினு கூட பார்க்காம இப்படியா டார்ச்சர் பண்றது... கணவரின் செயலால் கடுப்பான அமலாபால் - வீடியோ இதோ

சிவக்குமாரின் மகன் சூர்யா ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி தன்னுடைய மனைவி ஜோதிகா உடன் சேர்ந்து 2டி என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அந்நிறுவனத்தில் ஆரம்பத்தில் சின்ன பட்ஜெட் படங்களை தயாரித்து வெற்றிகண்ட அவர்கள் தற்போது பெரிய பட்ஜெட் படங்களை அடுத்தடுத்து தயாரித்து வருகின்றனர். இந்நிறுவனம் மூலமும் சிவக்குமாரின் குடும்பத்திற்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்து வருகிறது.

சிவக்குமார் குடும்பத்தில் அதிகளவில் சொத்துக்களுக்கு அதிபதியாக இருப்பது சூர்யா தானாம். இவர் 150 கோடிக்கு பிளாட் வாங்கி அதில் 28 கோடி செலவில் பிரம்மாண்ட மாளிகையையும் கட்டி இருக்கிறார். அதுமட்டுமின்றி 16 கோடி மதிப்புள்ள 6 சொகுசு கார்களையும் சூர்யா வைத்திருக்கிறாராம். இப்படி சிவக்குமாரின் மகன்கள் மற்றும் மகளின் சொத்து மதிப்பு மட்டும் 10 ஆயிரம் கோடிகளுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இவ்வளவு வருமானம் வருவதால் சூர்யா, கார்த்தி, சிவக்குமார் ஆகியோர் சேந்து அகரம் என்கிற தொண்டு நிறுவனத்தை நடத்தி அதன் மூலம் ஏராளமான ஏழை மாணவ, மாணவிகளை இலவசமாக படிக்க வைத்து அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வருகின்றனர். இதுதவிர கார்த்தி உழவன் பவுண்டேஷன் மூலம் விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Manjummel Boys : போட்ட 7 கோடியும் போச்சு.. என்ன ஏமாத்திட்டார் - Manjummel Boys தயாரிப்பாளர் மீது பகீர் புகார்!

click me!