பொதுவாகவே, நம் வீடுகளில் பல வகையான பாத்திரங்களைப் பயன்படுத்துவது வழக்கம். இவற்றில், பித்தளை, செம்பு, எஃகு போன்றவையும் அடங்கும். இதில் பித்தளையை மட்டும் வீட்டின் பூஜை அறையில் பயன்படுத்துவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், பித்தளை மட்டும் மிக விரைவாக கருப்பாக மாறிவிடும். இவற்றை சுத்தம் செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. மேலும் இவற்றை சுத்தம் பண்ணுவதில் பெண்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
ஆனால், இனி கவலை வேண்டாம். நம் வீடுகளில் இருக்கும் சில பொருட்களை வைத்து அவற்றை எளிதில் சுத்தம் செய்து விடலாம். மேலும் பார்ப்பதற்கு புதுசு போல இருக்கும். வாங்க அது என்னனு தெரிஞ்சிகலாம்..
சமையல் சோடா: சமையல் சோடாவைப் பயன்படுத்தி பழைய பித்தளைப் பாத்திரங்களை சுலபமாக சுத்தம் செய்யலாம். இதற்கு 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சிறிது எலுமிச்சை சாறுடன் கலந்து, பித்தளை பாத்திரங்களை பிரஷ் மூலம் சுத்தம் செய்து, பின் தண்ணீரை கொண்டு கழுவினால், பாத்திரம் புதியது போல் ஜொலிக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D