ரியாவுடன் வீட்டுக்கு வந்த ஆனந்த்... பளார் பளார் என அறைவிட்ட அபிராமி - கார்த்திகை தீபம் சீரியலில் செம டுவிஸ்ட்

First Published Mar 22, 2024, 3:48 PM IST

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ஆனந்த் ரியாவை வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

Karthigai deepam serial

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தினந்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மீனாட்சி கல்யாண நாளை கொண்டாட எல்லாம் ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்க கேக் கட் பண்ணும் நேரத்தில் ஆனந்த் ரியாவை உள்ளே அழைத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Zee Tamil Karthigai deepam serial

அதாவது ஆனந்த் ரியாவை உன்னைக் கூப்பிட்டு நானும் இவ்வளவு கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என்ற உண்மையை உடைக்க எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். உச்சகட்ட டென்ஷனில் அபிராமி ஆனந்தை பிடித்து உன்னையே நம்பி இருக்கவனுக்கு எப்படி துரோகம் பண்ண என பளார் பளார் என அறைகிறாள்.

இதையும் படியுங்கள்... Singam 4 : மீண்டும் துரைசிங்கம் ஆகப்போகிறாரா சூர்யா?... ‘சிங்கம் 4’ பற்றி இயக்குனர் ஹரி கொடுத்த அப்டேட்

Karthigai deepam serial Update

ஆனந்த் எனக்கு ஆரம்பத்தில் இருந்து மீனாட்சி சுத்தமா பிடிக்கல நீங்கதான் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சீங்க. காலேஜ் படிக்கும் போதிலிருந்தே நானும் ரியாவும் காதலிச்சோம். நீங்க கட்டாய படுத்தவே தான் அந்த குழந்தையும் பெத்துக்கிட்டோம். இந்த விஷயத்துல என்ன கேள்வி கேட்க உங்க யாருக்கும் தகுதியும் கிடையாது உரிமையை கிடையாது மீனாட்சி தான் பேசணும் அவ பேசட்டும் நான் அவகிட்ட பேசிக்கிறேன் என ஆனந்த் பதிலடி தருகிறான். 

Karthigai deepam serial Today Episode

இதையெல்லாம் கேட்டு மீனாட்சி அப்படியே உடைந்து போய் படிக்கட்டில் உட்கார ஆனந்த் அவளிடம் பேச போக கோபத்தில் கொந்தளிக்கும் மீனாட்சி ஒரு கட்டத்தில் கழுத்தில் இருக்கும் தாலியை கழட்டி ஆனந்த் முகத்தில் வீசி எறிகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைகாட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... கேப்டன் விஜயகாந்த் மகனின் 'படை தலைவனு'க்கு பக்க பலமாக ராகவா லாரன்ஸ்! சம்பளம் குறித்து வெளியான தகவல்!

click me!