Karthigai deepam serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் நியூஸ் எடிட்டர் ரவியிடம் பேசி வீட்டிற்கு வரவைத்து உண்மையை சொல்ல வைக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Karthigai deepam serial Update
நியூஸ் எடிட்டர் வராத காரணத்தினால் ராஜேஸ்வரி என்ன பா கார்த்திக் எதையோ நிரூபிக்க போறேனு சொன்ன, இப்போ ஒருத்தனையும் காணவில்லை என்று வம்பிழுக்கிறாள் ராஜேஸ்வரி. யார் கிட்ட என்ன பேசுறோம்னு பார்த்து பேசு என்று கார்த்திக்கை எச்சரிக்கிறாள். இதையடுத்து கார்த்திக் நியூஸ் எடிட்டர் கண்டிப்பா வருவாரு எனக்கு 5 மணி வரைக்கும் டைம் கொடுங்க என்று சொல்லி விட்டு நேராக ரவி வீட்டிற்கு கிளம்பி செல்கிறார்.