Karthigai deepam serial
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி வீட்டுக்கு வர தீபா ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்கும் நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது அபிராமி தீபாவிடம் நீ இந்த குடும்பத்துக்காக செய்த தியாகத்தை எல்லாம் நான் புரிஞ்சுகிட்டேன். நானே தேடி இருந்தா கூட இந்த மாதிரி ஒரு பொண்ணு கார்த்திக்கு கட்டி வச்சிருக்க முடியாது அவனுக்கு ஏத்தவன் நீ தான் என்று சொல்லி தீபாவை தன் மகனாக ஏற்றுக் கொள்கிறாள்.
Karthigai deepam serial Update
இதையடுத்து அருண் ஐஸ்வர்யாவும் பேசிக்கொள்ளும்போது ஐஸ்வர்யா நமக்கு சின்ன சின்ன கம்பெனி போதும், ஆனா இந்த வீட்டை மட்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது அதுதான் நம்முடைய அடையாளம் நீங்க கேக்கலனாலும் நான் இந்த வீட்ட கேட்பேன் என்று சொல்கிறாள். பிறகு கார்த்திக் சொத்து பிரிப்பது பற்றி பேசி வருத்தப்படுகிறார்.