அதாவது, வீட்டிற்கு வரும் கார்த்திக் அம்மாவோட இந்த நிலைமைக்கு ஐஸ்வர்யா அண்ணி தான் காரணம், அவங்க தான் எல்லா வேலையும் பண்ணி இருக்காங்க என்று சொன்னதும் அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஐஸ்வர்யா எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, என்னை உனக்கு பிடிக்காது என்பதால் தேவையில்லாமல் பழி போடாத என்று வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறாள்.
ஐஸ்வர்யாவை காப்பாற்ற ராஜேஸ்வரி நான் தான் எல்லாத்தையும் பண்ணேன், என் பொண்ணை அவங்க அடிச்சதால் அந்த கோபத்தில் இப்படி பண்ணிட்டேன் என்று சொல்ல கார்த்திக் அதை நம்ப மறுக்கிறான், எல்லாரும் கேள்வி கேட்க ஐஸ்வர்யாவும் ஏன் மா இப்படி பண்ணீங்க என்று கேள்வி கேட்டு டிராமா போட போலீஸ் ராஜேஸ்வரியை கைது செய்து ஜெயிலில் அடைகிறது.
Karthigai deepam serial
மறுபக்கம் அபிராமி கண் விழிக்க கார்த்திக் ஏன் மா இப்படி பண்ணீங்க என்று கேள்வி கேட்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.