Janhvi Kapoor : சென்னையில் நடிகை ஸ்ரீதேவி வாங்கிய முதல் வீடு... முதன்முறையாக வாடகைக்கு விடுகிறார் ஜான்வி கபூர்

First Published May 2, 2024, 12:40 PM IST

நடிகை ஸ்ரீதேவி சென்னையில் முதன்முதலில் வாங்கிய வீட்டை அவரது மகள் ஜான்வி கபூர் வாடகைக்கு விட உள்ளதாக அறிவித்து இருக்கிறார்.

1980களில் தமிழ் திரையுலகில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து பான் இந்தியா நடிகையாவும் திகழ்ந்து வந்தார். நடிகை ஸ்ரீதேவி கடந்த 1996-ம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இருமகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே சினிமாவில் நடித்து வருகின்றனர்.

ஸ்ரீதேவியின் மறைவுக்கு பின்னர் சினிமாவில் அறிமுகமான ஜான்வி கபூர், தற்போது பாலிவுட் மட்டுமின்றி டோலிவுட்டிலும் கலக்கி வருகிறார். இந்தியில் அவர் கைவசம் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாஹி என்கிற திரைப்படம் உள்ளது. இதுதவிர தெலுங்கில் ஜூனியர் என்.டி,ஆர் ஜோடியாக தேவரா திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஜான்வி கபூர், மேலும் ராம்சரண் - புச்சிபாபு சனா கூட்டணியில் உருவாகும் படத்திலும் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார் ஜான்வி.

நடிகை ஜான்வி கபூரின் அம்மா ஸ்ரீதேவி, முன்னணி நடிகையாக வலம் வந்த போதே பல்வேறு இடங்களில் சொத்துக்களை வாங்கினார். அதில் அவர் முதன்முதலில் வாங்கியது சென்னையில் கடற்கரையோரம் உள்ள பங்களா. அந்த வீட்டில் தான் ஸ்ரீதேவி வசித்து வந்தார். ஸ்ரீதேவி மறைவுக்கு பின்னர் அந்த வீட்டை புதுப்பிக்க முடிவெடுத்த போனி கபூர், பல கோடி செலவில் புதுப்பித்ததோடு, அதை தனது அலுவலகமாகவும் பயன்படுத்தி வருகிறார்.

இதையும் படியுங்கள்... Music Director Death: 28 வயதே ஆகும் இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் அதிர்ச்சி மரணம்! சோகத்தில் திரையுலகினர்!

அந்த வீட்டில் ஸ்ரீதேவியில் அரிய புகைப்படங்கள் மற்றும் அவர் வரைந்த ஓவியங்கள் உள்பட ஏராளாமன விஷயங்கள் அடங்கி இருக்கிறது. இந்த வீட்டை தற்போது வாடகைக்கு விட உள்ளதாக அறிவித்துள்ளார் ஜான்வி கபூர். அதன்படி Airbnb நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் தேர்ந்தெடுக்கப்படும் இருவருக்கு மட்டுமே ஸ்ரீதேவியின் சென்னை வீட்டில் முதன்முறையாக தங்க வாய்ப்பு கிடைக்க உள்ளது. இதற்கான முன்பதிவு மே 12-ந் தேதி முதல் தொடங்க இருக்கிறது.

இந்த அறிய வாய்ப்பை பெற உள்ளவர்கள் அந்த வீட்டில் ஒருநாள் தங்கிக்கொள்ள அனுமதிக்கப்படுவதோடு, ஜான்வி கபூர் உடன் சேர்ந்து உரையாடவும், உணவருந்தவும் முடியுமாம். குறிப்பாக தன்னுடைய பியூட்டி சீக்ரெட்டையும் அவர்களிடம் பகிர்ந்துகொள்ள உள்ளதாக ஜான்வி கபூர் அறிவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி ஜான்வி கபூரின் பேவரைட் உணவுகளான நெய் பொடி சாதம், ஆந்திரா பிரியாணி, பெசரட்டு தோசை, பால்கோவா ஆகியவை அவர்களுக்கு பரிமாறப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... மும்பையை உலுக்கிய LockUp மரணம்! சல்மான் கான் வீடருகே துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கு; கைதானவர் இறந்தது எப்படி?

click me!