Ravindhar Chandrashekar Mahalakshmi
சன் மியூசிக் தொலைக்காட்சியில் பாடல்கள் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் மகாலட்சுமி. இதை தொடர்ந்து, அனில் என்பவரை திருமணம் செய்து கொண்டு... சின்னத்திரையில் இருந்து விலகிய மகாலட்சுமி, மகன் சச்சின் பிறந்த சில வருடம் கழிந்து, மீண்டும் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக அறிமுகமானார்.
Ravindhar Chandrashekar Mahalakshmi
இந்த கள்ளக்காதல் சர்ச்சை அரங்கேறிய இரண்டு வருடங்களுக்கு பின் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை, மகாலட்சுமி திடீர் என திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். பணத்துக்கு ஆசை பட்டு தான், ரவீந்தரை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தது.
Ravindhar Chandrashekar Mahalakshmi
ரவீந்தர் - மகாவுக்கு திருமணம் ஆகி, இரண்டு வருடங்கள் ஆன பின்னரும், அவர்கள் எந்த ஒரு சோகமான பதிவு போட்டாலும் அது விவாகரத்துக்காக தான் என சில நெட்டிசன்கள்... கொளுத்தி போடும் நிலையில், இதற்க்கு ரவீந்தரும் பலமுறை பதிலடி கொடுத்துள்ளார்.
Ravindra Chandrasekaran, Mahalakshmi
இதை பார்த்த நெட்டிசன் ஒருவர்... உங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா என கேட்க... அதற்கு ரவீந்தர், எனக்கு எஞ்சி இருக்கும் ஒரே உலகம் மகாலட்சுமி தான். அதனால் நீங்கள் கடினமாக பிரார்த்தனை செய்து கொண்டே இருங்கள், ஆனால் நீங்கள் நினைப்பது மட்டும் நடக்காது, அது சாத்தியமற்றது என பதில் கொடுத்துள்ளார் என்பது குறிபிடித்தக்கது.