Samantha: நான் எத்தனையோ இரவுகள் தூக்கமில்லாமல் தவித்தேன்...நடிகை சமந்தா ஓபன் டாக்...

First Published Jun 18, 2022, 10:46 AM IST

Samantha: நடிகை சமந்தா சமீபத்திய பேட்டியில், சிலர் என்னை கேலி செய்கின்றனர், கடுமையான அவதூறு வார்த்தைகளில் பேசுகிறார்கள் என்று வேதனை தெரிவித்துள்ளார்.

Image: Samantha Ruth PrabhuInstagram

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். சமீப காலமாக, இவரின் மார்க்கெட் கொடி கட்டி பறக்கிறது.  தமிழ் சினிமாவிற்கு, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் சமந்தா. தமிழில் முன்னணி நாயகர்களான சூர்யா, விஜய் உள்ளிட்டவர்களுடன் ஜோடியாக நடித்து  ஹிட் கொடுத்தவர்.

Samantha

பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை 7 வருடம் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு,  திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு, வித்தியாசமான கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வந்தார். குறிப்பாக, இவரது நடிப்பில் வெளியான ஓ பேபி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்கள்  சமந்தாவிற்கு  இந்தியா நாயகியாக அந்தஸ்தை பெற்று தந்தது.நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கருத்து வேறுபாடு காரணமாக தங்களுடைய விவாகரத்து முடிவை அறிவித்தனர். 

34 வயதே ஆகும் சமந்தா விவாகரத்துக்கு பின் மீண்டும் படங்களில் நடிக்க தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். சமீப காலமாக கவர்ச்சி பக்கம் தாவிய சமந்தா, நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ''ஓ சொல்றியா மாமா பாடல்'' பட்டி தொட்டி எங்கும் பரவி இளசுகளின் மனதை கொள்ளை கொண்டது. சமீபத்தில், இவர் நடிப்பில், வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம், சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. இந்த படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம்  தமிழ் இளசுகளை கொள்ளை கொண்டது.

தற்போது கைவசம் பல படங்கள் வைத்திருக்கும் சமந்தா, தெலுங்கில் யசோதா, சகுந்தலம், ஆகிய இரண்டு படங்களில் நாயகியாக நடித்துள்ளார். படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இவர், ஹாலிவுட் திரையுலகிலும் கால் பதித்துவிட்டார். இதுதவிர, சமந்தா தற்போது குஷி என்ற படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். விஜய் நிர்வானா இயக்கத்தில் உருவாகும்  இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் டிசம்பர் 23-ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகும் என்று படக்குழு அண்மையில் அறிவித்தது.

Image: Samantha Ruth PrabhuInstagram

சமந்தா, சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். இணையத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தும் வருகிறார். இந்த நிலையில் சமந்தா தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில், ''சமீப காலமாக சமூக வலைதளங்களில் நான் அதிக நேரம் செலவு செய்கிறேன். எனக்கு ரசிகர்களோடு பேசுவது, அவர்களின் விருப்பங்களை தெரிந்து, அதற்கு ஏற்ற மாதிரியான படங்களில் நடிப்பது பிடிக்கும். அந்த உணர்வே தனி அனுபவம். அதை நான் என்னுடைய வார்த்தைகளால் சொல்ல முடியாது.

Image: Samantha Ruth PrabhuInstagram

ஆனால், சிலர் என்னை கேலி செய்கின்றனர். கடுமையான அவதூறு வார்த்தைகளில் பேசுகிறார்கள். அவர்களால் நான் எத்தனையோ இரவுகளை தூக்கமில்லாமல் கழித்தேன். நான் தவறு செய்யாத வரை எனக்கு எந்த வேதனையும் இல்லை. என்னை நேசிக்கும் ரசிகர்களுக்காக நான் என்றும் என்னுடைய பெஸ்ட் கொடுத்து கொண்டே இருப்பேன்'' இவ்வாறு அந்த பேட்டியில்  சமந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...Nayan and Vignesh: ஹனிமூனே போகல...அதுக்குள்ள ஷூட்டிங்கிற்கு திரும்பும் நயன்தாரா..வருத்தத்தில் விக்னேஷ் சிவன்..
 

click me!