நாம் ஆரோக்கியமாக இருக்க ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்துவது உண்டு. ஆனால், இவற்றுடன் நாம் குடிக்கும் தண்ணீரும் அவசியம் என்பது பலருக்கு தெரிவதில்லை. ஆனால், ஒருசிலரே இதில் கவனம் செலுத்துகிறார்கள்.
இந்நிலையில், தற்போது அதிகரித்து வரும் மாசுபாடு காரணமாக பலர் வாட்டர் பில்டர் வாங்குகின்றனர். காரணம் அவர்கள் குடிக்கும் தண்ணீரில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். தரமான வாட்டர் பில்டர் குறைந்தது 3 ஆயிரம் செலவாகும். ஆனால் இப்படி இதை வாங்காமலே வீட்டிலேயே தண்ணீரை எளிதாக சுத்திகரிக்க முடியும் தெரியுமா..?
ஆம்.. வாட்டர் பில்டர் வாங்காமலேயே வீட்டில் இருக்கும் சில பொருட்களைப் பயன்படுத்தி தண்ணீரை எளிதாக சுத்திகரிக்க முடியும். இதன் மூலம் தண்ணீரை சுத்திகரித்து குடிக்கலாம். சரி வாங்க இப்போது நாம் அது குறித்து பார்க்கலாம்..
உங்களுக்கு ஐஸ் வாட்டர் குடிக்கும் பழக்கம் இருந்தால், உடனே அதை நிறுத்துங்கள். இது ஆரோக்கியத்திற்கு அவ்வளளவு நல்லதல்ல. அதற்கு பதிலாக, கொதிக்க வைத்த நீரை குடியுங்கள். வெந்நீர் தண்ணீரில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கிறது.
குளோரின் தண்ணீரை சுத்திகரிக்கவும் பயன்படுத்தலாம். இவை கடைகளில் எளிதாகக் கிடைக்கின்றன. குளோரின் மாத்திரைகளை தண்ணீரில் போட்ட பிறகு சுமார் 30 நிமிடங்களுக்கு தண்ணீரை குடிக்க கூடாது. அதன் பிறகு தான் தண்ணீரை குடிக்க வேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D