உண்மையை யூகித்த ஜனனி! கரிகாலன் வார்த்தையை கேட்டு கடுப்பான சக்தி.. எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய அப்டேட்!

First Published Mar 18, 2024, 1:48 PM IST

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'எதிர்நீச்சல்' சீரியலின் இன்றைய எபிசோட் குறித்த பிரோமோ தற்போது வெளியாகி உள்ளது. இன்று என்ன நடக்க போகிறது என்பது பற்றி பார்க்கலாம்.
 

தர்ஷினி கடத்தப்பட்ட பின்னர், இரண்டு வாரங்களுக்கு மேல்... கடத்தல் தொடர்பான கதைக்களத்தை ஜவ்வு மிட்டாய் போல் இழுத்த சீரியல் குழுவினர், ஒரு வழியாக கடந்த வாரத்தோடு இதற்க்கு எண்டு கார்டு போட்டனர். 

ஜீவானந்ததால் காப்பாற்றப்பட்ட தர்ஷினியை, கண்டுபிடிப்பதற்காக காட்டிற்குள் சென்ற IPS அதிகாரி ஒருவழியாக கண்டுபிடித்து பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். காட்டுக்குள் குருவி, மற்றும் விலங்குகள் சத்தத்தை கண்டு பயந்து நடுங்கிய தர்ஷினி, தற்போது வரை அந்த பயத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார்.

திருமணமான ஒரே வருடத்தில் இறந்த கணவர்..! ஏழே மாதத்தில் மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுத்த நடிகை ஸ்ருதி!

மேலும் தன்னை கடத்தி இப்படி பட்ட கொடுமைக்கு ஆளாக்கியது, தன்னுடைய தந்தை தான் என்பதை சொல்லும் நிலையில் தர்ஷினி இல்லாத நிலையில், தர்ஷினியை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள குணசேகரன் முயல்கிறார். மேலும் இன்றிய எபிசோடில்... குணசேகரனின் இந்த நடவடிக்கைக்கு பின்னால் உள்ள ரகசியத்தை துல்லியமாக கணித்துள்ளார் ஜனனி.

தர்ஷினிக்கு, அவரை பற்றி எதோ ஒரு உண்மை தெரிஞ்சிருக்கு... அதனால் தான் அவளை அவர் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள நினைக்கிறார் என கூறுகிறார். மற்றொருபுறம், கல்யாணம் பண்ணுனா பித்து கலைஞ்சிடும் என கரிகாலன் பேச, இதை கேட்டு கடுப்பான சக்தி... ஏய் உன்னை இங்கையே சம்பவம் செஞ்சிவிட்டுட்டு போயிடுவேன் என கோபவமாக பேசுகிறார். 

"என் தங்கை இந்திரஜா.. மணமக்களுக்கு உங்க ஆசீர்வாதம் வேணும்".. செம Celebration வீடியோ வெளியிட்ட நடிகர் ராஜ்கமல்!

எனவே இன்றைய தினம்... தர்ஷினி வாயை திறந்து ஏதாவது பேசுவாரா? காட்டுக்குள் துப்பாக்கி குண்டு பட்டு உயிருக்கு போராடும் ஜீவானந்தத்தின் நிலை என்ன என்று? எதிர்பாராத திருப்புமுனைகளுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

click me!