சமீப காலமாக அதிகமாக சம்பளம் பெறுவதை நடிகர்கள் அவர்களின் கௌரவமாக நினைக்க துவங்கி விட்டனர். ஆந்த வகையில் அஜித், விஜய், ரஜினி, கமல் போன்றவர்கள் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க 150 கோடி முதல் 200 கோடி வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. ஆனால் இவர்களுக்கு முன்பு, தமிழ் சினிமாவில் அதிரடியாக 1 கோடி சம்பளம் பெற்ற முதல் ஹீரோ என்றால் அது ராஜ்கிரண் தான்.
பேட்டி ஒன்றில், ராஜ்கிரண் கூறுகையில், “எனக்கு ஒரு கோடி சம்பளம் தருவதாக சொன்னது எனக்கு பெரிதாக தெரியவில்லை. ஏனெனில், நான் 16 வயசுல சென்னைக்கு வந்து முதன்முதலில் வாங்கிய சம்பளம் 4 ரூபாய் 50 பைசா. அப்போது நான் தினக்கூலியாக இருந்தேன். இதையடுத்து என்னுடைய உழைப்பையும், நேர்மையையும் பார்த்து நான் வேலை பார்த்த கம்பெனியிலேயே கிளர்க்காக பதவி உயர்வு கொடுத்தாங்க. அப்போது மாதம் 150 ரூபாய் சம்பளம். பின்னர் அதை 170 ரூபாயாக உயர்த்தி கொடுத்தார். அந்த ஒரு கம்பெனியில் தான் நான் வேலை பார்த்தேன்.பின்னர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி திரைப்படங்களை தயாரித்தேன் என கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அரண்மனை கிளி, எல்லாமே என் ராசாதான், மாணிக்கம், பாசமுள்ள பாண்டியாரே, பொன் விலையுற பூமி என கிராமத்து கதைக்களத்தை தேர்வு செய்து ஹீரோவாக நடித்தார். தனித்துவமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்த ராஜ்கிரண். ரஜினி - கமல் போன்ற நடிகர்கள் முன்னணி நடிகராக இருந்த காலத்தில், அவர்களே 50 முதல் 75 லட்சம் சம்பளமாக வாங்கியபோது, தான் நடித்த படத்திற்கு 1 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.
rajkiran
கடந்த 1996-ம் ஆண்டு கே.வி.பாண்டியன் இயக்கத்தில், இவர் நடித்த 'மாணிக்கம்' படத்துக்காக தான் முதன் முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கினாராம். இதன் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக ரூ.1 கோடி வாங்கிய நடிகராகவும் மாறினார். இந்த படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடித்திருந்தார். இப்படத்தை அம்மா கிரியேசன்ஸ் சார்பாக டி.சிவா தயாரித்து இருந்தார். இவருக்கு பின்னர் தான் ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோர் 1 கோடி சம்பளம் பெற்றனர் என்பது குறிபிடித்தக்கது.
Star Movie Review: கவின் நடிப்பில் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஸ்டார்.. ரசிகர்கள் மத்தியில் மின்னியதா?