Simbu : சிம்புவிற்கு சொன்ன கதையில் பிரதீப் ரங்கநாதன்? பரவிய தகவல் உண்மையா? போட்டு உடைத்த இயக்குனர் அஸ்வத்!

First Published Apr 12, 2024, 1:45 PM IST

Pradeep Ranganathan : தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், இப்பொது மிகசிறந்த ஹீரோவாக உருவெடுத்துள்ளார். பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இப்பொது நடித்து வருகின்றார்.

oh my kadavule

கடந்த 2010ம் ஆண்டு வெளியான "ஓ மை கடவுளே" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் அஸ்வத் மாரிமுத்து. அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான அந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து அதே படத்தை அஸ்வத் "ஓரி தேவுடா" என்ற பெயரில் தெலுங்கு மொழியிலும் இயக்கியிருந்தார். 

Romeo Day 1 Box Office: விஜய் ஆண்டனியின் 'ரோமியோ' வசூலில் கெத்து காட்டியதா? முதல் நாள் கலெக்ஷன் நிலவரம்!

Simbu

இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து, பிரபல நடிகர் சிம்பு அவர்களை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. அஸ்வந்த் அவர்களும், சிம்புவிடம் தான் ஒரு கதையை சொல்லியுள்ளதாகவும், அதற்கு சிம்பு ஓகே சொல்லிவிட்டார் என்றும் கூறியிருந்தார். ஆனால் அதன் பிறகு அந்த படம் குறித்த தகவல்கள் எதுவம் வெளியாகவில்லை.

Ashwath

இந்நிலையில் LIC என்ற படத்தில் நடித்து வரும் பிரபல இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன், விரைவில் அஸ்வந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில், சிம்புவிடம் சொன்ன கதையில் தான் பிரதீப் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இப்பொது அஸ்வந்த் வெளியிட்ட தகவலில், சிம்புவிற்கு தான் கூறிய கதை வேறு என்றும், பிரதீபுக்கு தான் கூறியுள்ள கதை வேறு என்று கூறியுள்ளார். 

சென்னையை பின்புலமாக கொண்டு தான் இந்த கதை நகரும் என்றும், இது பிரதீப்புக்காக தான் எழுதிய தனி கதை என்றும் அஸ்வந்த் தெளிவுபடுத்தியுள்ளார்.

Ramya Pandian : ஸ்டைலிஷ் தமிழச்சியாக மாறிய இடுப்பழகி ரம்யா பாண்டியன்... கலக்கலான கலர்ஃபுல் போட்டோஸ் இதோ

click me!