கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாகவே, பிரபல சீரியல் நடிகை ரக்ஷிதா மற்றும் நடிகர் தினேஷ் திருமணம் முறிவு குறித்த தகவல்கள், சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' என்கிற சீரியல் மூலம் அறிமுகமான ரக்ஷிதா, பின்னர் இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த, தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ரக்ஷிதா பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடினார். அப்போது தன்னுடைய அம்மா - அப்பா பற்றிய பேசிய இவர் தினேஷ் குறித்து பேசவில்லை. இதற்க்கு பின்னர் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வருவது உறுதியானது.
இந்நிலையில் தினேஷ் பற்றிய தகவல்கள் அவ்வபோது வெளியாகி வரும் நிலையில், தினேஷின் பெற்றோர் தன்னுடைய மருமகள் ரக்ஷிதா குறித்து தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். அதன்படி அவர்கள் கூறுகையில். "ரக்ஷிதாவை எந்த ஒரு குறையும் சொல்ல முடியாது. அவர் எங்கள் அனைவர் மீதும் அளவற்ற பாசம் வைத்திருந்தார். ரக்ஷிதா என் மீது வைத்திருந்த பாசத்தைப் பார்த்து சிலர் பொறாமை பட்டுள்ளனர்.
என்னை அம்மா... அம்மா... என்று மிகவும் அன்பாக பார்த்துக் கொள்வார். எனக்கு பெண் குழந்தைகள் இல்லாததால் நானும் அவரை ஒரு மகளாக தான் பார்த்தேன் என கண்ணீர் மல்க பேசியுள்ள தினேஷின் தாய், இவர்கள் பிரிவின் காரணம் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
எந்த ஒரு பிரச்சனை இருந்தாலும், ரக்ஷிதா இவ்வளவு நாள் எங்களை விட்டு பிரிந்திருக்க மாட்டார். ஆனால் இவ்வளவு நாள் ஏன், இப்படி இருக்கிறார் என்பது எங்களுக்கே தெரியவில்லை. ரக்ஷிதா மிகவும் நல்ல பொண்ணு. அவரது கேரக்டரும் அப்படி தான். இப்போது தவறான வழி நடத்துதலின் கீழே இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவரை பற்றி எந்த ஒரு தவறான தகவல் வந்தாலும் கண்டிப்பாக நாங்கள் நம்ப மாட்டோம். அவருக்காக காத்திருப்போம் என்று உருக்கமாக கூறியுள்ளார். மேலும் இன்றைய தினம் தினேஷும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், தன்னுடைய மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடு குறித்து பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.