Rachitha: ரக்ஷிதா மகாலட்சுமி இப்படி பட்ட பெண்ணா? தினேஷை பிரிய காரணம் இது தான்... கண்ணீர் விட்ட தாய்!

First Published Nov 21, 2023, 6:47 PM IST

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்த தினேஷ் மற்றும் தன்னுடைய மருமகள் ரக்ஷிதாவின் பிரிவு குறித்து தினேஷின் தாயார் கண்ணீருடன் கூறி உள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
 

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாகவே, பிரபல சீரியல் நடிகை ரக்ஷிதா மற்றும் நடிகர் தினேஷ் திருமணம் முறிவு குறித்த தகவல்கள், சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' என்கிற சீரியல் மூலம் அறிமுகமான ரக்ஷிதா, பின்னர் இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த, தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி மிகவும் சந்தோஷமான ஜோடிகளாக இருவருமே வாழ்ந்த நிலையில், யார் கண் பட்டதோ தெரியவில்லை... தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரக்ஷிதா தொடர்ந்து, சீரியல் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தினேஷும் சீரியலில் நடித்து வருகிறார். இருவருக்கும் இடையே குழந்தை பெற்று கொள்ளாதது தான் பிரச்சனை என கூறப்பட்டது. ஆனால் இது குறித்து ரக்ஷிதா மற்றும் தினேஷ் இருவருமே ஒரு வார்த்தை கூட கூறியது இல்லை.

வாழ்க்கையில் நடந்த பூகம்பம்.. கதறி அழுத விசித்ரா! குறைபாட்டை கூறி அதிர்ச்சி கொடுத்த மாயா! பரபரப்பு ப்ரோமோ!

ரக்ஷிதா பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடினார். அப்போது தன்னுடைய அம்மா - அப்பா பற்றிய பேசிய இவர் தினேஷ் குறித்து பேசவில்லை. இதற்க்கு பின்னர் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வருவது உறுதியானது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில், ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்ற ரஷிதா, எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் வெளியே வந்தார். இவரை தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரக்ஷிதாவின் கணவர் தினேஷ் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இவருடைய ஆட்டம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் நிலையில், கண்டிப்பாக பிக் பாஸ் பைனல் வரை வருவார் என்று நம்பப்படுகிறது. பைனலிஸ்ட்  போட்டியாளர்கள் லிஸ்டில் கண்டிப்பாக தினேஷ் இருப்பார் என நம்பப்படுகிறது.

Rashmika Mandanna: கருகரு கருப்பாயி... பிளாக் கலர் சேலையில் குஷி பட ஜோதிகாவாக மாறிய ராஷ்மிகா! கியூட் போட்டோஸ்!

இந்நிலையில் தினேஷ் பற்றிய தகவல்கள் அவ்வபோது வெளியாகி வரும் நிலையில், தினேஷின் பெற்றோர் தன்னுடைய மருமகள் ரக்ஷிதா குறித்து தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். அதன்படி அவர்கள் கூறுகையில். "ரக்ஷிதாவை எந்த ஒரு குறையும் சொல்ல முடியாது. அவர் எங்கள் அனைவர் மீதும் அளவற்ற பாசம் வைத்திருந்தார். ரக்ஷிதா என் மீது வைத்திருந்த பாசத்தைப் பார்த்து சிலர் பொறாமை பட்டுள்ளனர்.

என்னை அம்மா... அம்மா... என்று மிகவும் அன்பாக பார்த்துக் கொள்வார். எனக்கு பெண் குழந்தைகள் இல்லாததால் நானும் அவரை ஒரு மகளாக தான் பார்த்தேன் என கண்ணீர் மல்க பேசியுள்ள தினேஷின் தாய், இவர்கள் பிரிவின் காரணம் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

எந்த ஒரு பிரச்சனை இருந்தாலும், ரக்ஷிதா இவ்வளவு நாள் எங்களை விட்டு பிரிந்திருக்க மாட்டார். ஆனால் இவ்வளவு நாள் ஏன், இப்படி இருக்கிறார் என்பது எங்களுக்கே தெரியவில்லை. ரக்ஷிதா மிகவும் நல்ல பொண்ணு. அவரது கேரக்டரும் அப்படி தான். இப்போது தவறான வழி நடத்துதலின் கீழே இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவரை பற்றி எந்த ஒரு தவறான தகவல் வந்தாலும் கண்டிப்பாக நாங்கள் நம்ப மாட்டோம். அவருக்காக காத்திருப்போம் என்று உருக்கமாக கூறியுள்ளார். மேலும் இன்றைய தினம் தினேஷும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், தன்னுடைய மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடு குறித்து பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!