கடலூர் சிப்காட் பகுதியில் ஏராளமான ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், அங்குள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் நேற்று பாய்லர் பராமரிப்பு பணி நடைபெற்று இரவு சோதனை ஓட்டம் நடைபெற்றது.
அப்போது எதிர்பாராத விதமாக பாய்லருக்கு செல்லும் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால் குழாயில் இருந்து ரசாயன புகை வெளியேறி அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த விபத்து காரணமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D