Tamilnadu Rain: அடுத்த 3 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் தரமான சம்பவம் இருக்காம்.. வானிலை மையம் எச்சரிக்கை.!

First Published Dec 30, 2023, 9:39 AM IST

அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

tamilnadu rain

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 1ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

chennai rain

அதேபோல் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது நகரின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. 

meteorological centre

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது 10 மணிவரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தேனி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. 

click me!