ஈசிஆரில் பண்ணை வீடு... தினந்தோறும் சக நடிகைகளுடன் உல்லாசம்! வடிவேலு ஒரு காமக்கொடூரன்... பகீர் கிளப்பிய பிரபலம்

First Published Feb 5, 2024, 12:28 PM IST

நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு காமக்கொடூரன் என்றும் அவர் சக நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாகவும் கூறி பயில்வான் ரங்கநாதன் பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

vadivelu

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமானவர் பயில்வான் ரங்கநாதன். இவர் நடிக்க வரும் முன் சினிமா பத்திரிகையாளராக பணியாற்றினார். தற்போது நடிகர், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை பற்றி பல்வேறு தகவல்களை கூறி யூடியூப்பில் சர்ச்சைக்குரிய பிரபலமாக வலம் வருகிறார் பயில்வான். அந்த வகையில் தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக உள்ள வடிவேலு குறித்து பல்வேறு ஷாக்கிங் தகவல்களை வெளியிட்டுள்ளார் பயில்வான்.

Bayilvan Ranganathan

அதுபற்றி அவர் பேசி இருப்பதாவது : “பணத்தை முன்கூட்டியே கொடுத்தால் தான் கால்ஷீட்டே கொடுப்பார் வடிவேலு. அதேபோல் நிறைய நடிகர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியும் இருக்கிறார். வடிவேலு தனக்கு உதவி செய்ததாக இதுவரை ஒரு நடிகர் கூட சொன்னதில்லை. இவரைக்காட்டிலும் விவேக், கவுண்டனி, செந்தில் போன்ற நகைச்சுவை நடிகர்கள் நிறைய பேருக்கு உதவி இருக்கிறார்கள். நகைச்சுவை நடிகர்களில் பத்து பைசாவுக்கு உதவாத ஆளு வடிவேலு தான்.

Comedy actor Vadivelu

வடிவேலு தான் சம்பாதிக்கும் பணம் மொத்தத்தையும் ரியல் எஸ்டேட்டில் தான் முதலீடு செய்வார். அதிலும் ஒரு நடிகரை ஏமாற்றிவிட்டதாக வழக்கு நிலுவையில் உள்ளது. அதேமாதிரி ஒரு நடிகையுடன் தொடர்ந்து நடிக்க மாட்டார். படத்துக்கு படம் வேறு நடிகைகளுடன் நடிக்க விரும்புவார். வண்டு ஒரு பூவில் மட்டும் தேன் எடுக்காது, பல பூக்களில் அமர்ந்து தேன் எடுக்கும், அந்த மாதிரி ஆள் தான் வடிவேலு. அதேமாதிரி அவருக்கு ஈசிஆர் ரோட்டில் பண்ணைவீடு ஒன்று இருக்கிறது.

இதையும் படியுங்கள்... மைக் மோகன் மீதான ஒருதலைக்காதல் தோல்வி... 3 குழந்தைகளை பெற்றெடுத்த அந்த நடிகை யார்? வெளிவந்த ரகசியம்

vaigaipuyal Vadivelu

6 மணி ஆகிவிட்டால் தன்னுடன் நடிகையை அழைத்துக் கொண்டு அங்கு சென்றுவிடுவார். பெண்களை அனுபவித்துவிட்டு மோசமான விளைவுகளையும் ஏற்படுத்துவார். இது வடிவேலு கூட நடித்தவர்களுக்கு நன்றாக தெரியும். அந்த நடிகைகள் சிலர் வெளியில் சொல்ல கூச்சப்படுவார்கள். வடிவேலு என் பொளைப்பை கெடுத்துவிட்டார்னு பல நடிகைகள் சொல்லி இருக்காங்க. 2 படம் கொடுப்பாரு தனக்கு இணங்க நடந்துகொள்ளவில்லை என்றால் துரத்திவிட்டு விடுவார். நான் சொன்னது எதுவுமே பொய்யில்லை.

Bayilwan says about Vadivelu

இன்றைக்கு வடிவேலு பழைய நடிகர்களுடன் சேர்ந்து நடிக்காமல் புதுப்புது நடிகர்களுடன் நடித்த எந்த படமும் ஓடவில்லை. வடிவேலு உடைய ஈக்குபோக்கு தெரிந்தவர்கள் பழைய நடிகர்கள், ஆனால் இப்போ உள்ளவர்கள் அப்படி இல்லை. சமீபத்தில் ரெடின் கிங்ஸ்லி படப்பிடிப்புக்கு லேட்டாக வந்ததைப்பற்றி வடிவேலு கேட்டதற்கு அவர் எதிர்த்து பேசிவிட்டார். இதனால் வடிவேலு கப்சிப் என ஆகிவிட்டார். வடிவேலு ரெடின் கிங்ஸ்லிக்காக 3 மணிநேரம் காத்திருந்தாராம். இப்படி வடிவேலு பற்றி சொல்ல நெகடிவ் பாயிண்ட்ஸ் நிறைய இருக்கிறது என பயில்வான் கூறினார்.

இதையும் படியுங்கள்... நிர்வாண படத்துக்கு ஆசைப்பட்டு பெண்ணிடம் பணத்தை பறிகொடுத்த துணை நடிகர்.. எவ்ளோ நேக்கா ஏமாத்திருக்காங்க பாருங்க!

click me!