தந்தையுடன் சண்டை... மன உளைச்சலில் இருந்த பவதாரிணி... இறப்புக்கு பின் வெளிவந்த ஷாக் தகவல்

First Published Jan 27, 2024, 12:59 PM IST

இளையராஜாவின் மகள் பவதாரிணி புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்துள்ள நிலையில், அவர் பற்றி பல ஷாக்கிங் தகவலை பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டு உள்ளார்.

இளையராஜாவின் மகளான பவதாரிணி புற்றுநோய் பாதிப்பு காரணமாக கடந்த ஜனவரி 25-ந் தேதி மாலை இலங்கையில் மரணமடைந்தார். சிகிச்சைக்காக இலங்கை சென்றிருந்த அவருக்கு சிகிச்சை தொடங்கும் முன்னரே உயிர்பிரிந்துள்ளது. இதையடுத்து தனது அக்காவின் உடலை வாங்கிக் கொண்டு நேற்று மாலை சென்னை திரும்பினார் யுவன் சங்கர் ராஜா. பின்னர் சென்னையில் உள்ள இளையராஜாவின் வீட்டில் பவதாரணியின் உடன் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு ஏராளமான திரைப்பிரபலங்கள் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து நேற்று இரவு சென்னையில் இருந்து இளையராஜாவின் சொந்த ஊரான தேனி அருகே உள்ள பண்ணைபுரத்திற்கு பவதாரிணி உடல் கொண்டுவரப்பட்டது. அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பவதாரிணியின் உடலுக்கு உறவினர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். பண்ணைபுரத்தில் உள்ள பண்ணைவீட்டில் தான் பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. 

இந்த நிலையில், பவதாரிணி குறித்து சில ஷாக்கிங் தகவல்களை பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். அதன்படி, அவர் கூறியதாவது : “பவதாரிணி எஸ்.என்.ராமச்சந்திரன் என்பவரது மகனை தான் காதல் திருமணம் செய்துகொண்டார். அவரின் இல்லறை வாழ்க்கை எதிர்பார்த்தபடி அமையவில்லை. இதனால் கணவரை பிரிந்து மீண்டும் தந்தையுடன் வசித்து வந்தார். 47 வயதாகியும் தனக்கு குழந்தை இல்லை என்பது தான் பவதாரிணிக்கு மிகப்பெரிய வருத்தமாக இருந்திருக்கிறது.

இதையும் படியுங்கள்... Bhavatharini Husband: பவதாரிணிகணவர் யார்? பலரும் அறியாத சில தகவல்கள் இதோ!

பவதாரணிக்கு பித்தப்பையில் கல் இருப்பது ஓராண்டுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். பின்னர் அது புற்றுநோயாக மாறி சிறு நீரகத்துக்கும் பரவி உள்ளது. இதற்காக சிகிச்சை எடுத்தும் பலனளிக்கவில்லை. மருத்துவர்கள் கைவிட்டதை அடுத்து தான் ஆயுர்வேத சிகிச்சை எடுக்க இலங்கை சென்றிருக்கிறார். ஆனால் அந்த சிகிச்சைக்கு முன்னரே உயிரிழந்துவிட்டார் என பயில்வான் கூறி உள்ளார்.

Bhavatharini Final Rituals

தன்னுடைய வீட்டில் இசையின் ஆதிக்கம் அதிகம் இருந்ததால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாக பவதாரிணியே பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். மேலும் யுவன் திருமணத்தின் போது இஸ்லாம் மதத்திற்கு மாறியதை இளையராஜா எதிர்த்தாராம். அப்போது தந்தையுடன் சண்டைபோட்டு அது அவனுடைய உரிமை அதற்காக ஆதரவாக நிற்க வேண்டும் என்று பேசி தன் தம்பிக்காக கடைசி வரை சப்போர்ட் ஆக இருந்துள்ளார் பவதாரிணி. அவரின் மறைவுக்கு பின்னர் தான் இதுபோன்ற தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... தாய், மனைவியை அடக்கம் செய்த அதே இடத்தில் மகளின் உடலை அடக்கம் செய்யும் இளையராஜா..!

click me!