பழம்பெரும் நடிகர் விஜயகுமாருக்கு 2 மனைவிகள் என்பது அனைவருக்கும் தெரியும். முதல் மனைவியான முத்துக்கண்ணுவிற்கு பிறந்த பிள்ளைகள் கவிதா விஜயகுமார், அனிதா விஜயகுமார், அருண் விஜய். இவர்களில் கவிதா விஜயகுமார், சர்தகுமாரின் கூலி படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்திருப்பார். அருண் விஜய்யும் பல படங்களில் ஹீரோவாக நடித்த நிலையில், தற்போது வில்லன் கேரக்டரிலும் மிரட்டி வருகிறார்.
ஆனால் விஜயகுமார் குடும்பத்தில் திரையில் நடிக்காத ஒரே மகள் என்றால் அது அனிதா விஜயகுமார் தான். 1973-ம் ஆண்டு பிறந்த அனிதா விஜயகுமார் ஒரு மருத்துவர் ஆவார். கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்ட அனிதா கத்தார் நாட்டில் செட்டில் ஆனார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
அனிதாவின் மகள் தியாவும் மருத்துவராக இருக்கிறார். இவருக்கு திலன் என்பவருக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் ஆனது. இதுதொடர்பான புகைப்படங்கள் அப்போது வைரலானது. இந்த நிலையில் தியா - திலன் திருமணம் கடந்த திங்கள்கிழமை பிரம்மாண்டமாக நடந்தது.
diya marriage photos
பந்தக்கால் நடுவது, மெஹந்தி விழா, சங்கீத், ஹல்தி ஃபங்ஷன் என கடந்த ஒரு வாரமே தியாவின் திருமண கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்தது. நேற்று முன் தினம் பிரம்மாண்டமாக நடந்த தியா – திலனின் திருமணத்தில் விஜயகுமாரின் ஒட்டுமொத்த குடும்பத்தினர் மட்டுமின்றி பல்வேறு திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த், பிரபு, சினேகா, பிரச்சன்னா, பாக்கியராஜ், மீனா, கே.எஸ். ரவிக்குமார், ஜெயம் ரவி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
"என் பேத்திக்கு கல்யாணம்.. நான் ரொம்ப ஹாப்பி" அருண் விஜயோடு செம டான்ஸ் போட்ட விஜயகுமார் - வைரல் வீடியோ!
இந்த நிலையில் இந்த திருமணம் குறித்து பயில்வான் ரங்கநான் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் பேசிய அவர் “ முதல் மனைவிக்கு பிறந்த கவிதா, அனிதா இருவரையும் புத்திசாலித்தனமாக விஜயகுமார் டாக்டருக்கு படிக்க வைத்தார். அனிதாவின் மகள் தியாவும் டாக்டருக்கு படித்துள்ளார். இவர் திருமணம் செய்து கொண்டுள்ளவரும் டாக்டர் தான். அதே போல் தியாவின் தாய் மாமனான அருண் விஜய் நடிகர் என்பதை தாண்டி மிகப்பெரிய மருத்துவரின் மருமகன். அவருக்கு பல கோடி மதிப்பில் சொத்து இருக்கிறது.
இதனால் அருண் விஜய் தாய்மாமன் என்ற முறையில் நகைகள், சீதனம் ஆகியவற்றை அள்ளி கொடுத்துள்ளார். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்றால் புதுமாப்பிள்ளை தியாவின் காலை தொட்டு கும்பிட்டு இருகிறார். எந்த திருமணத்திலும் இதுபோன்று பார்த்ததில்லை. மாமனார், மாமியா அனைவருமே டாக்டர், பெரிய சினிமா குடும்பம் என்ற காரணத்தால் இப்படி செய்தாரா என்பது தெரியவில்லை. இந்த திருமணம் பல கோடி ரூபாய் செலவில் நடந்திருப்பதாகவும், 300 சவரன் நகை மற்றும் 2 பங்களா உள்ளிட்டவை தியாவுக்கு சீதனமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது” என்று தெரிவித்தார்.