Anna Serial : மேல கைவச்ச அவ்ளோதான்... முத்துப்பாண்டியை லெப்ட் ரைட் வாங்கிய இசக்கி - அண்ணா சீரியல் டுவிஸ்ட்

First Published Mar 21, 2024, 3:53 PM IST

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் ஸ்வீட் வாங்கி வர கனி வெட்கப்பட்டு நின்ற நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna Serial

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் ஸ்வீட் வாங்கி வர கனி வெட்கப்பட்டு நின்ற நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது சண்முகம் அண்ணன் கிட்ட என்ன வெட்கம் என்று சொல்ல பரணி இப்போ அப்படித்தான் கொஞ்சம் வெட்கப்படுவா என சொல்கிறாள்.  

மறுபக்கம் இசக்கி பாக்கியத்திடம் எதுக்கு ஜாதகம் எழுத போய் இருப்பதா பொய் சொன்னீங்க என்று கேட்க பொய் சொல்ல உண்மையாவே கனிக்கு ஜாதகம் எழுதணும்னு சொல்கிறாள். கனிக்கு பிறந்த தேதி தெரியாது. அதனால அவ வயசுக்கு வந்த நேரத்தை வைத்து தான் ஜாதகம் எழுதணும் அதுக்கு ஜோசியரை பார்க்கணும் பரணி கிட்ட அவ வயசுக்கு வந்த டைம் கேட்டுக்கணும் என சொல்கிறாள். அப்படின்னு மறுபக்கம் சண்முகம் கனிக்கு ஜாதகம் எழுத வயசுக்கு வந்த நேரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என முயற்சி செய்கிறான். 

Zee Tamil Anna Serial

இந்த நிலையில் பரணி நாளைக்கு கனிக்கு ஜாதகம் எழுத போகணும் போயிட்டு வரலாம் என்று சொல்ல நீ எதுக்கு அவ வயசுக்கு வந்த நேரத்தை சொல்லி நானும் அப்பாவும் போயிட்டு வரும் என சொல்கிறான். ஆனால் பரணி அப்படி எல்லாம் சொல்ல முடியாது நான் வருவேன் நான் வந்தா தான் அவ வயசுக்கு வந்த நேரம் தெரியும் என்று ஒரு பேப்பரைக் காட்டி அதை அலமாரியில் வைத்துவிட்டு படுத்து தூங்குகிறாள். பரணி தூங்கியதும் சண்முகம் நைசாக எழுந்து அந்த பேப்பரை எடுத்து பார்க்க அதில் ஒன்றும் இல்லாமல் இருக்கிறது. 

இதையும் படியுங்கள்... புது பொண்டாட்டியுடன் வந்து மனைவி மீனாட்சிக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஆனந்த் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

Anna Serial Update

இந்த நேரம் பார்த்து கண்டுபிடிக்கும் பரணி என்ன, என்ன விட்டுட்டு போயிடலாம்னு பார்த்தியா? போய் தூங்கு நாளைக்கு காலையில ஒன்னா போகலாம் என்று சொல்ல சண்முகம் படுத்துக் கொள்கிறான். இங்கே சௌந்தரபாண்டி வீட்டில் இசக்கி படுத்து தூங்கிக் கொண்டிருக்க முத்துப்பாண்டி ரத்னாவும் வெங்கடேசன் ஒன்றாக இருந்ததை நினைத்து நினைத்து பார்த்து டென்ஷன் ஆகிறான். தூங்கிக் கொண்டிருக்கும் இசக்கியை அடித்து எழுப்பி உங்க அக்கா என்னடி அவன் கூட கொஞ்சி கொலாவிட்டு இருக்கா என கோபப்படுகிறான். இசக்கி அதுல என்ன இருக்கு எங்க அக்கா அவரை தான் கட்டிக்க போற என்று சொல்கிறாள். 

Anna Serial Today Episode

இதைக் கேட்ட முத்துப்பாண்டி என்ன கட்டிக்காதவ கழுத்துல எவன் தாலியும் ஏறக்கூடாது என சொல்ல, இசக்கி தெரிஞ்சோ தெரியாமலே என் கழுத்துல தாலி கட்டி இப்போ என்கூட வாழ்ந்துட்டு இருக்கேன், என் அக்காவோட வாழ்க்கையை கெடுக்கணும்னு நினைச்ச உன் குரவளையை கடிச்சு ரத்தத்தை குடிச்சிடுவேன் என்று எச்சரிக்கை கொடுக்க முத்துப்பாண்டி அதிர்ச்சியில் திருத்திருவென முழிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... Sandhya Raagam: சாரு எடுத்த சபதம்.. தனத்தை கண்டித்த ஜானகி - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்!

click me!