அண்ணா சீரியல் : முத்துப்பாண்டிக்கு விபூதி அடித்துவிட்டு.. திருட்டுத்தனமாக சண்முகம் வீட்டிற்குள் நுழைந்த இசக்கி

First Published Mar 20, 2024, 4:14 PM IST

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பாக்கியமும் இசக்கியும் கனியை பார்ப்பதற்காக கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna serial

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் பாக்கியமும் இசக்கியும் கனியை பார்ப்பதற்காக கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது வீட்டுக்கு வந்த முத்துப்பாண்டி பாக்கியம் மற்றும் இசக்கி என இருவரும் இல்லாமல் இருப்பதை பார்த்து சௌந்தர பாண்டியிடம் கேட்க அவங்க சண்முகம் அவமானப்படுத்தி அனுப்புனதில் மனசு உடைந்து கோயிலுக்கு போய் இருப்பாங்க என்று சொல்ல முத்துப்பாண்டி இல்ல அவங்க அங்க திரும்ப போய் இருக்க வாய்ப்பு இருக்கு என்ன சொல்ல சௌந்தரபாண்டி சரி நீ போய் பாரு என சொல்கிறார். 

Zee Tamil Anna Serial

மறுபக்கம் பாக்கியமும் இசக்கியும் யாருக்கும் தெரியாமல் பின்பக்கமாக சண்முகம் வீட்டிற்குள் வந்து கனியை பார்த்து கொஞ்சுகின்றனர். அடுத்ததாக முத்துப்பாண்டி வர எதிரே வரும் சண்முகம் அவனைப் பார்த்து எங்கு வந்த என்று கேட்க, என் அம்மாவும் இசக்கியும் இங்கதான் இருக்காங்க என்று சொல்ல அவங்க இங்கு இல்லை என சண்முகம் சொல்லி வீட்டிற்கு அழைத்து வர இதைப் பார்த்து பரணி இருவரையும் கனி இருக்கும் குடிசைக்குள் மறைத்து வைக்கிறாள். 

இதையும் படியுங்கள்... கார்த்திகை தீபம் சீரியல் : ரியாவின் திருமணத்தை தடுத்து நிறுத்திய தீபா... இறுதியில் ஆனந்த் கொடுத்த அதிர்ச்சி..!

Anna Serial Update

பாரு இங்க அவங்க யாருமில்லை என்று சண்முகம் முத்துப்பாண்டியை திட்டி அனுப்ப வீட்டுக்கு வந்த அவன் அங்க அவங்க இல்லை என சொல்கிறான். அதே சமயம் ரத்னா மற்றும் வெங்கடேஷ் அன்னோன்யமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்து பயங்கர கடுப்பா இருந்தது எனக்கு கிடைக்காதுடா நான் யாருக்கும் கிடைக்கக்கூடாது என சொல்ல சௌந்தரபாண்டி சரி அதுக்கு ஒரு வழியை பண்ணிடலாம் என கூறுகிறார். 

Anna Serial Today Episode

அதன் பிறகு பாக்கியமும் இசக்கியும் வீட்டுக்கு வர, எங்க போயிட்டு வரீங்க என்று கேட்க கனிக்கு ஜாதகம் பார்க்க போனதாக சொல்லி சமாளிக்கின்றனர். அவன்தான் உங்களை மதிக்கிறது இல்லயே அப்புறம் எதுக்கு இந்த வேலை என்று கேட்க நான் அப்படித்தான் பண்ணுவேன் என பதிலடி கொடுக்கிறார். 

அதைத்தொடர்ந்து சண்முகம் கனிக்கு பிடித்த ஸ்வீட்டை வாங்கி வர கனி அண்ணனை பார்க்க வெக்கப்பட, சண்முகம் அண்ணன் கிட்ட என்ன வெட்கம் என்ன சொன்னது வெளியே வந்து சண்முகத்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... Sandhya Raagam: ரகுராம் காலில் விழுந்த அப்பா.. சாரு எடுத்த சபதம் - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்

click me!