Anna Serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் இசக்கி பயந்து கொண்டே முத்துப்பாண்டிக்கு சாப்பாடு பரிமாற முப்பிடாதி சண்முகத்துக்கு வெட்டுக்கிளியை பிடித்து ஜெயிலில் போட்டு வைத்திருக்கும் விஷயத்தை சொல்ல இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Anna Serial Update
அதன் பிறகு சண்முகம் தேவை இல்லாம ஒருத்தன் பிடித்து ஜெயில்ல போட்டு இருக்காங்கப்பா டிஎஸ்பிக்கு போன் போட்டு சொல்றேன் என போன் பண்ண முயற்சி செய்ய தடுத்து நிறுத்தும் பரணி இந்த பிரச்சனையை வளர விடக்கூடாது என சொல்கிறாள். வேணும்னா எஃப் ஐ ஆர் போடு, ஆதாரமே இல்லாமல் ஒருத்தனை ஜெயில்ல போடாத என்று சொல்ல முப்பிடாதி எஃப் ஐ ஆர் போட்டா நமக்கு தான் பிரச்சனை என்று சொல்ல முத்துப்பாண்டி அதை புரிந்து கொண்டு வெட்டுக்கிளியை ரிலீஸ் செய்கிறான்.
Anna Serial Today Episode
வெளியே வந்த வெட்டுக்கிளி சண்முகத்திடம் பயங்கரமா அடிச்சுட்டாரு என ஜெயிலில் நடந்த விஷயங்களை சொல்லி வருத்தப்பட கனி அதிர்ச்சியில் பிஸ்டலை எடுத்தது நான்தான் என்ற உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கிறாள். வீட்டுக்கு வந்த கனி இந்த விஷயம் அண்ணனுக்கு தெரிஞ்சா அண்ணனுக்கு தான் பிரச்சனை அவருக்கு தெரியாமலேயே ஏதாவது செய்யணும் என முடிவு எடுத்து உண்மையை சொல்லாமல் மறைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... Surya Kiran Death: படிக்காதவன் பட குட்டி ரஜினி... நடிகர் சூரிய கிரண் திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!