இசக்கியை அடித்து துன்புறுத்தும் முத்துப்பாண்டி; தங்கைக்காக சண்முகம் எடுத்த முடிவு என்ன? அண்ணா சீரியல் அப்டேட்

First Published Feb 23, 2024, 3:30 PM IST

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகத்தை பார்ப்பதற்காக வீட்டில் பாக்கியம் காத்திருந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna Serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோட்டில் சண்முகத்தை பார்ப்பதற்காக வீட்டில் பாக்கியம் காத்திருந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது சண்முகம் வீட்டுக்கு வர பாக்கியம் இருப்பதை பார்த்து எப்ப வந்த என்று கேட்க இசக்கிக்கு தாலி பிரித்து கோர்க்க போகும் விஷயத்தை சொல்லி கூப்பிட சண்முகம் இந்த வீட்டுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவளை பத்தி பேசறது இருந்தா நீயும் இந்த வீட்டுக்கு வராத என்று சொல்கிறான். அதோடு போகும்போது உன் பொண்ணு பரணியையும் கூட்டிட்டு போயிடு என்று சொல்ல பரணி கோபமடைகிறாள்.

Zee Tamil Anna Serial

நீ தாலி கட்டுன பிறகு தான் உனக்கு பொண்டாட்டி ஆனா இது என்னுடைய தாய் மாமன் வீடு நான் இங்கதான் இருப்பேன் போக முடியாது என்று நேருக்கு நேராக பதிலடி கொடுக்கிறாள். அப்படியே மறுபக்கம் முத்துப்பாண்டி ஷூவுக்கு இசக்கி பாலிஷ் போட, பாண்டியம்மா வேலையெல்லாம் ஒழுங்கா செய்றங்களா என்று கேட்க முத்துப்பாண்டி எல்லா வேலையும் செய்கிறார், என்ன சொன்னாலும் பதில் பேசமாட்டார் இவளை என்னதான் பண்றது என கேட்கிறான். 

இதையும் படியுங்கள்... டைட் உடையில் செக்ஸி லேடியாக நைட் பார்ட்டிக்கு வந்த சன் டிவி சீரியல் நடிகை- போட்டோ பார்த்து ஷாக் ஆன நெட்டிசன்ஸ்

Anna Serial Update

இப்ப அவ செய்கிற வேலையை அப்படியே ஃபோட்டோ பிடித்து அவ அண்ணனுக்கு அனுப்பு பார்த்து சந்தோசப்படட்டும் என்று சொல்ல முத்துப்பாண்டியன் போட்டோ எடுக்க முயற்சி செய்ய இசக்கி எழுந்து உள்ளே சென்று விடுகிறான். இதனால் அவளை அடித்து துன்புறுத்த பாக்கியம் வீட்டுக்கு வர இசக்கி அழுது கொண்டிருப்பதை பார்த்து நடந்ததை அறிந்து எல்லோரிடமும் சண்டையிடுகிறாள். 

அவ என் மருமக அவளுக்கு நான் இருக்கேன் யாராச்சும் ஏதாச்சும் சொன்னா நான் சும்மா இருக்க மாட்டேன் என்று பதிலடி கொடுக்கிறாள். இதைப் பார்த்த சிவபாலன் இவங்க இதுக்கு எல்லாம் சரிப்பட்டு வர மாட்டாங்க நான் போய் சண்முகம் மாமா கிட்ட சொல்றேன். அவர் வந்து நாலடி போட்டார் நான் தான் அடங்குவாங்க என்று கிளம்பிச் செல்ல இவர்கள் வரட்டும் அவன் என்ன பண்றான்னு பார்த்திடலாம் என்று சொல்கின்றனர். 

Anna Serial Today Episode

சண்முகத்தை பார்க்க வந்த சிவபாலன் விஷயத்தை சொல்ல உங்க வீட்ல நடக்கிறது எதையும் இங்க சொல்லாத அவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அதிர்ச்சி கொடுக்கிறேன். ஆனால் இதையெல்லாம் கேட்ட பரணியும் சண்முகத்தின் தங்கைகளும் முத்துப்பாண்டிக்கு பதிலடி கொடுக்க முடிவெடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... இப்போதைக்கு வேண்டாம்.. ஹனிமூன் பிளானை தள்ளிப்போட்ட ரகுல் - ஜாக்கி தம்பதி.. இதுதான் காரணமாம்..

click me!