இசக்கி - முத்துப்பாண்டிக்கு நடக்கும் சாந்தி முகூர்த்த ஏற்பாடு.. செம டென்ஷன் ஆன சண்முகம்- அண்ணா சீரியல் அப்டேட்

First Published Feb 16, 2024, 2:28 PM IST

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி கண்ணீருடன் புலம்ப அதை சிவபாலன் கேட்டு பீல் செய்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி கண்ணீருடன் புலம்ப அதை சிவபாலன் கேட்டு பீல் செய்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது ஷண்முகம் வீட்டிற்கு வராமல் ஓரிடத்தில் புலம்பி கொண்டிருக்க வெட்டுக்கிளி அவனை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைக்க ஷண்முகம் வீட்டிற்கு வந்தா இசக்கி ஞாபகமாவே இருக்கு நான் வரல என்று சொல்ல அப்பா ரொம்ப வருத்தப்படுறாரு வா அண்ணே என்று கூப்பிட்டும் ஷண்முகம் வர மறுக்கிறான். 

Zee Tamil Anna serial

மறுபக்கம் பாக்கியத்துக்கு கை கால் வழியாக இருக்க வீட்டிற்கு உருவி விட வந்த பாட்டி கல்யாணம் நடந்து முடிஞ்சிடுச்சு அடுத்து என்ன என்ற கேட்க பாக்கியம் என்ன செய்யறதுன்னு புரியாமல் இருப்பதாக சொல்கிறாள். பாட்டி நீ மட்டும் உன் புருஷனை விரும்பியா கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த, ஆனால் அவன் கூட சேர்ந்து வாழலையா? அதே மாதிரி தான் சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு பண்ணு, அவங்களும் நல்லபடியா சேர்ந்து வாழ்வாங்க என்று சொல்கிறாள். 

இதையும் படியுங்கள்... டாடா நாயகனுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு... வெற்றிமாறன் படத்தில் நயன்தாரா உடன் நடிக்கும் கவின்..!

Anna Serial Update

இதனை தொடர்ந்து பாக்கியம் ஜோசியரை சந்தித்து நாள் குறித்து கொடுக்க சொல்லி கேட்க இன்னைக்கே நாள் நல்லா தான் இருக்கு என்று சொல்கிறார். பையனுக்கு மட்டும் நாள் குறிக்க வந்திருக்கீங்க பொண்ணுக்கு வேற ஜோசியரை பார்த்து நாள் குறிச்சிடீங்களா என்று கேட்க பாக்கியம் அவங்களுக்கு பிடிக்காமல் கல்யாணம் நடந்ததால் இன்னும் எதுவும் நடக்கல என்று சொல்ல ஜோசியர் அவங்களுக்கும் நாள் குறித்து கொடுத்து அனுப்புகிறார். 

anna serial Today Episode

பாக்கியம் பரணியை வர வைத்து முத்துப்பாண்டி இசக்கி சாந்திமுகூர்த்தம் குறித்து சொல்ல பரணி பிடித்து திட்டி வீட்டிற்கு அழைத்து வருகிறாள். இங்க இசக்கி பரணியை பார்த்ததும் அண்ணன் எதாவது சொல்லுச்சா என்று விசாரிக்க பரணி எதுவும் சொல்லல என்று சொல்கிறாள். ஜோசியர் சண்முகத்தை பார்க்க பரணியும் பாக்கியமும் சாந்தி முகூர்த்தத்துக்கு நாள் குறிக்க வந்ததாக சொல்ல பரணியை தப்பாக புரிந்து கொண்டு கோபபமடைகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... ஓவ்வொரு தாயின் கனவு! மகள் திருமணத்திற்காக வீட்டையே மலர் மாளிகை போல் மாற்றிய அருண் விஜய்யின் சகோதரி அனிதா!

click me!