Anna serial: பஞ்சாயத்தில் அந்தர்பல்டி அடித்த பரணி; அதிர்ச்சியில் ஷண்முகம்- அண்ணா சீரியலில் எதிர்பாரா திருப்பம்

First Published Apr 12, 2024, 3:56 PM IST

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் என் பொண்ணு சண்முகத்தோட சந்தோஷமா இல்ல என்று சொல்லி சௌந்தரபாண்டி பிரச்சனை செய்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna Serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியல் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பஞ்சாயத்துக்கு வந்து ஊருக்குத்தான் உபதேசம் என் பொண்ணு சண்முகத்தோட சந்தோஷமா இல்ல என்று சொல்லி பிரச்சனை செய்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது சௌந்தரபாண்டி சொன்னதைக் கேட்டு சண்முகம் நாங்க சந்தோஷமா தான் இருக்கோம் என்று சொல்கிறார். ஆனால் சௌந்தரபாண்டி அதை நீ சொல்லக்கூடாது என் பொண்ணு தான் சொல்லணும் என்று சொல்லி சனியன் அனுப்பி பரணியை பஞ்சாயத்திற்கு கூட்டி வர சொல்கிறார். 

Zee Tamil Anna Serial

வீட்டுக்கு வந்து சனியன் கூப்பிட்டதும் ரத்னா உனக்கும் அண்ணனுக்கும் இருக்கும் பிரச்சனை எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் பஞ்சாயத்தில் அண்ணனை விட்டுக் கொடுத்து விடாத என்று சொல்லி அனுப்புகிறாள். பரணி பஞ்சாயத்துக்கு வர, சௌந்தரபாண்டி பேசிக்கொண்டே இருக்க கொஞ்சம் பொறுங்க பரணி பதில் சொல்லட்டும் அத வச்சு தான் தீர்ப்பு சொல்ல முடியும் என்று சொல்கின்றனர். பிறகு பரணியிடம் நீயும் சண்முகமும் சந்தோஷமா தான் இருக்கீங்களா? சண்முகம் நல்ல புருஷனா நடந்துக்கிறானா என்று கேட்கின்றனர். 

இதையும் படியுங்கள்... ஆசையை தூண்டிவிட்ட அபிராமி... சொத்துக்காக மல்லுக்கட்டபோகும் ரியா & ஐஸ்வர்யா - கார்த்திகை தீபம் சீரியல் ட்விஸ்ட்

Anna Serial Update

பரணி காதருகே வந்த ஷண்முகம் சந்தோஷமாத்தான் இருக்கும்னு சொல்லு என்று சொல்ல பரணி இல்லையென அதிர்ச்சி கொடுக்கிறாள். உடனே இதைக் கேட்ட சௌந்தரபாண்டி சந்தோஷத்தில் திளைக்க, சந்தோஷமா இல்லன்னு சொன்னதும் உடனே பிரிஞ்சு போகிறது நம்ம ஊரு வழக்கம் கிடையாதே, நான் சண்முகத்துக்கு இரண்டு வாரம் டைம் தரேன். அவ எனக்கு நல்ல புருஷனா இருக்கானான்னு பாக்கலாம் என்று சொல்ல, சௌந்தரபாண்டி அதை யார் கவனிக்கிறது என்று கேள்வி கேட்கிறார். 

Anna Serial Today Episode

நீங்க வேணும்னா ஒரு ஆளை அனுப்பி எங்கள கவனிச்சுக்கோங்க என்று சொல்ல, சௌந்தரபாண்டி சனியன் மற்றும் அவரது மனைவியை சண்முகம் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். பைக்கில் சண்முகம் கோபமாக வர, பரணி எனக்கு இளநீர் வேண்டும் என்று சொல்லி அடம் பிடிக்கிறாள். மேலும் ஒரு இளநீரை ரெண்டு பேரும் குடிக்க பிளான் போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... 22 வருடங்களுக்கு பின் விக்ரம் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா? ஹிட் கொடுத்த சீயான்!

click me!